M K Stalin
ஏன் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின்.. மழுப்பல் பதில் சொன்ன எடப்பாடி
காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம் இன்று பதினெட்டாம் நாளாக தொடர்கிறது. அத்தி வரதர் வழிபாட்டுக்காக பல மாநிலங்களிலிருந்து அதிக அளவில் மக்கள் வருகை தந்ததால், கூட்ட நெரிசலில் சிக்கி 4 பக்தர்கள் பலி ஆகியுள்ளனர்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அப்போது, அத்தி வரதரை தரிசிக்க பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளதால் அங்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் உள்ளதா? என கேள்வி எழுப்பினார். 4 பேர் இறந்துள்ளனர், 31 பேர் மயக்கமடைந்துள்ள செய்தி அரசுக்கு வந்துள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
பின்னர், பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அத்திவரதரை தரிசிக்க, இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை; திருப்பதியில் கூட 75,000 பேர் தான் தினமும் வருகின்றனர். அத்திவரதரை நாள் ஒன்றுக்கு 1 முதல் ஒன்றரை லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வந்தவர்கள் இறந்தது குறித்து விவரமான பதிலை பின்னர் அளிப்பதாக கூறினார்.
கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Also Read
-
“இவைதான் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் மோடி செய்யும் தாக்குதல்கள்..” - பட்டியலிட்டு முரசொலி காட்டம்!
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!