M K Stalin
உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழிலும் வெளியிட வேண்டும் : ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்!
உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழிலும் வெளியிடவேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.
கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது : “உச்சநீதிமன்றத் தீர்ப்பை மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் முடிவு வரவேற்கத்தக்கது. அதே வேளையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கான மொழிப் பட்டியலில் தமிழ் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழிலும் வெளியிடவேண்டும் எனும் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை உடனே நிறைவேற்றவேண்டும்” என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “உயர்நீதிமன்றத்தில் தமிழகை வழக்காடு மொழியாகக் கொண்டு வருவதற்கு சட்டப்பேரவையில் தி.மு.க தீர்மானம் கொண்டுவந்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழில் வெளியிட அரசு தீர்மானம் கொண்டுவர வேண்டும்; அதற்கு தி.மு.க முழு ஆதரவு அளிக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!