M K Stalin
உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழிலும் வெளியிட வேண்டும் : ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்!
உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழிலும் வெளியிடவேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.
கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது : “உச்சநீதிமன்றத் தீர்ப்பை மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் முடிவு வரவேற்கத்தக்கது. அதே வேளையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கான மொழிப் பட்டியலில் தமிழ் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழிலும் வெளியிடவேண்டும் எனும் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை உடனே நிறைவேற்றவேண்டும்” என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “உயர்நீதிமன்றத்தில் தமிழகை வழக்காடு மொழியாகக் கொண்டு வருவதற்கு சட்டப்பேரவையில் தி.மு.க தீர்மானம் கொண்டுவந்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழில் வெளியிட அரசு தீர்மானம் கொண்டுவர வேண்டும்; அதற்கு தி.மு.க முழு ஆதரவு அளிக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
மதக் கலவரத்தைத் தூண்டுவதா? - உயர்நீதிமன்ற நீதிபதியே துணை போவதா? : ஆசிரியர் கி.வீரமணி ஆவேசம்!
-
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால்... : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
-
சென்னை மாநகர செரீப்.. எழுத்தாளர்... தயாரிப்பாளர்... பன்முக கலைஞர் AVM சரவணன் காலமானார்!