M K Stalin
உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழிலும் வெளியிட வேண்டும் : ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்!
உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழிலும் வெளியிடவேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.
கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது : “உச்சநீதிமன்றத் தீர்ப்பை மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் முடிவு வரவேற்கத்தக்கது. அதே வேளையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கான மொழிப் பட்டியலில் தமிழ் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழிலும் வெளியிடவேண்டும் எனும் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை உடனே நிறைவேற்றவேண்டும்” என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “உயர்நீதிமன்றத்தில் தமிழகை வழக்காடு மொழியாகக் கொண்டு வருவதற்கு சட்டப்பேரவையில் தி.மு.க தீர்மானம் கொண்டுவந்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழில் வெளியிட அரசு தீர்மானம் கொண்டுவர வேண்டும்; அதற்கு தி.மு.க முழு ஆதரவு அளிக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
‘‘இதுதான் RSS, பாஜக ஆட்சி” - முஸ்லிம்களுக்கு மகப்பேறு பார்க்க மறுத்த உ.பி. அரசுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
தொழில்முனைவோர்களின் உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்க e-marketplace... தமிழ்நாடு அரசு அசத்தல் அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத வகையில் நெல் சாகுபடி” -அமைச்சர் MRK பன்னீர்செல்வம் விவரங்களுடன் அறிக்கை!
-
“முஸ்லீம்-குலாம் சிகிச்சை பார்க்க முடியாது..” -கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க மறுத்த உ.பி அரசு மருத்துவர்!
-
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர்கள் நிரந்தரமாக நியமனம் - அமைச்சர் கோவி.செழியன் !