M K Stalin
உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழிலும் வெளியிட வேண்டும் : ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்!
உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழிலும் வெளியிடவேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.
கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது : “உச்சநீதிமன்றத் தீர்ப்பை மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் முடிவு வரவேற்கத்தக்கது. அதே வேளையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கான மொழிப் பட்டியலில் தமிழ் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழிலும் வெளியிடவேண்டும் எனும் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை உடனே நிறைவேற்றவேண்டும்” என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “உயர்நீதிமன்றத்தில் தமிழகை வழக்காடு மொழியாகக் கொண்டு வருவதற்கு சட்டப்பேரவையில் தி.மு.க தீர்மானம் கொண்டுவந்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழில் வெளியிட அரசு தீர்மானம் கொண்டுவர வேண்டும்; அதற்கு தி.மு.க முழு ஆதரவு அளிக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்த்தாயின் தலைமகன் : பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் : காப்பீட்டு நிறுவனங்களுக்கு அமைச்சர் MRK உத்தரவு!
-
பெண்ணையாறு - ஒன்றிய அரசு நடுவர் மன்றத்தை உடனே அமைக்க வேண்டும் : அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்!
-
பாஜக அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் GetOutதான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒன்றும் இல்லை : நிர்மலா சீதாராமனுக்கு குறள் ஒன்றை நினைவூட்டிய முரசொலி!