M K Stalin
அமேசான் வெற்றியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
அமேசான் வெற்றியாளர்களைப் பாராட்டி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது :
“புகழ்பெற்ற அமேசான் நிறுவனம் உலகளாவிய அளவில் நடத்திய Pen to publish 2018, தமிழ் மொழிக்கான நெடும் படைப்பு பிரிவில் திராவிட இயக்கத்தின் இளம் எழுத்தாளரான டாக்டர் செந்தில் பாலன் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.
பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 3,000 எழுத்தாளர்கள் பங்கேற்ற போட்டியில் டாக்டர் செந்தில் பாலன் எழுதிய 'பரங்கிமலை இரயில் நிலையம் ' என்ற புதினம், கிண்டில் (kindle) வாயிலாக அதிகமானவர்களால் படிக்கப்பட்டிருப்பதுடன், போட்டிக்கான நடுவர்களாலும் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 5 லட்சம் பரிசாகப் பெற்றுள்ளது. இத்தகைய மகத்தான வெற்றியைப் பெற்ற டாக்டர் செந்தில் பாலன் அவர்களுக்கு மனம் கனிந்த வாழ்த்துகளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல், 2000 - 10,000 வார்த்தைகள் கொண்ட குறும்படைப்பு பிரிவில் பத்திரிகையாளர் விக்னேஷ் சி செல்வராஜ், எழுதிய நீள்கட்டுரையும் பரிசு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இளம் படைப்பாளிகளை அடையாளம் காணச் செய்யும் இதுபோன்ற போட்டிகளில் சமுதாயத்திற்கு பலன் தரும் படைப்புகளை இவர்கள் தொடர்ந்து வழங்கிட வேண்டுமென வாழ்த்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!
-
நீட் மோசடி.. NTA அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு ? - உச்ச நீதிமன்றத்தில் பகீர் கிளப்பு புதிய மனு!
-
ஓசூர் விமான ஆய்வு மையம் ஆந்திராவுக்கு மாற்றம் : இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது - டி.ஆர்.பி.ராஜா!
-
வீட்டு பால்கனியில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளர்: இதை வளர்ப்பதால் என்ன தப்பு?- போலீசாரிடம் வாக்குவாதம்