M K Stalin
அமேசான் வெற்றியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
அமேசான் வெற்றியாளர்களைப் பாராட்டி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது :
“புகழ்பெற்ற அமேசான் நிறுவனம் உலகளாவிய அளவில் நடத்திய Pen to publish 2018, தமிழ் மொழிக்கான நெடும் படைப்பு பிரிவில் திராவிட இயக்கத்தின் இளம் எழுத்தாளரான டாக்டர் செந்தில் பாலன் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.
பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 3,000 எழுத்தாளர்கள் பங்கேற்ற போட்டியில் டாக்டர் செந்தில் பாலன் எழுதிய 'பரங்கிமலை இரயில் நிலையம் ' என்ற புதினம், கிண்டில் (kindle) வாயிலாக அதிகமானவர்களால் படிக்கப்பட்டிருப்பதுடன், போட்டிக்கான நடுவர்களாலும் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 5 லட்சம் பரிசாகப் பெற்றுள்ளது. இத்தகைய மகத்தான வெற்றியைப் பெற்ற டாக்டர் செந்தில் பாலன் அவர்களுக்கு மனம் கனிந்த வாழ்த்துகளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல், 2000 - 10,000 வார்த்தைகள் கொண்ட குறும்படைப்பு பிரிவில் பத்திரிகையாளர் விக்னேஷ் சி செல்வராஜ், எழுதிய நீள்கட்டுரையும் பரிசு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இளம் படைப்பாளிகளை அடையாளம் காணச் செய்யும் இதுபோன்ற போட்டிகளில் சமுதாயத்திற்கு பலன் தரும் படைப்புகளை இவர்கள் தொடர்ந்து வழங்கிட வேண்டுமென வாழ்த்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
விதிமீறல்களுக்கு பெயர்போன பா.ஜ.க! : நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம்!
-
பாகிஸ்தான் உதவியை நாடும் பா.ஜ.க! : தேர்தல் விதிமுறைகளை தகர்க்கும் மோடி அரசு!
-
குற்றவாளிகளுக்கு தரப்படும் ஜாமீன், முதல்வர்களுக்கு மறுக்கப்படுகிறது : பா.ஜ.க.வின் அடக்குமுறை அரசியல்!
-
”திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் மனங்களில் தாண்டவமாடும் மகிழ்ச்சி” : கி.வீரமணி வாழ்த்து!
-
”அரசியல் சாசனம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய நினைக்கும் மோடி” : ராகுல் காந்தி தாக்கு!