India
பா.ஜ.க ஆளும் மாநிலத்தின் அவலம் - உயிருக்குப் போராடிய கணவர்: மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!
பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேச மாநிலம், கட்னி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகுல் பர்மன். இவர் சாலை விபத்தில் சிக்கியுள்ளார். அவரை மீட்ட பொதுமக்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அப்போது ஆம்புலன்ஸில் அவரது ரத்தம் சிந்தியுள்ளது. மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வந்தபோது, அவரை உடனே சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாமல், அங்கிருந்த அவரது மனைவியிடம் வாகனத்தைச் சுத்தம் செய்யும்படி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வற்புறுத்தியுள்ளனர்.
இதனால் அந்தப் பெண் அழுதுகொண்டே வாகனத்தைச் சுத்தம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்குக் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தேவா சாஹு மற்றும் மருத்துவ உதவியாளர் மோஹித் கதிக் ஆகியோர் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!