India
நாடகத்தில் நடிக்கும் போதே உயிரிழந்த 70 வயது நடிகர் : சோகத்தில் சக நடிகர்கள்!
இமாச்சல பிரதேசம், சம்பா பகுதியைச் சேர்ந்தவர் அம்ரேஷ் மகாஜன். நாடக நடிகரான இவர், ராம்லீலா நாடகத்தில் தசரதனாக நடித்துக் கொண்டிருந்தார்.
இந்த நாடகம் சம்பா பகுதியில் நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக நடிகர்கள் உடனே அவரை அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு ஏற்பட்டு வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு சக நடிகர்கள் கதறி அழுதனர்.
மேலும் இதுதான், நான் நடிக்கும் கடைசி நாடகமாக இருக்கும் என இறப்பதற்கு முன்பு சக நடிகர்களிடம் அம்ரேஷ் மகாஜன் கூறிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!
-
5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள்…அனைத்து தரப்பினருக்குமானது திராவிட மாடல் ஆட்சி: துணை முதலமைச்சர் பேச்சு!
-
சாலைப் பயணத்திற்கு இனி கவலை இல்லை… ரூ.1,843.85 கோடி செலவில் 11 சாலைகள்: திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
ரூ.211.90 கோடியில் 45 முடிவுற்ற, ரூ.53.76 கோடியில் 9 புதிய திட்டப் பணிகள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கொ.ம.தே.க-விற்கு 2 சீட் ஒதுக்கீடு: கொங்கு மண்டலத்தில் தி.மு.க மிகப்பெரிய வெற்றி பெறும் - ஈஸ்வரன் பேட்டி!