India
நாடகத்தில் நடிக்கும் போதே உயிரிழந்த 70 வயது நடிகர் : சோகத்தில் சக நடிகர்கள்!
இமாச்சல பிரதேசம், சம்பா பகுதியைச் சேர்ந்தவர் அம்ரேஷ் மகாஜன். நாடக நடிகரான இவர், ராம்லீலா நாடகத்தில் தசரதனாக நடித்துக் கொண்டிருந்தார்.
இந்த நாடகம் சம்பா பகுதியில் நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக நடிகர்கள் உடனே அவரை அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு ஏற்பட்டு வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு சக நடிகர்கள் கதறி அழுதனர்.
மேலும் இதுதான், நான் நடிக்கும் கடைசி நாடகமாக இருக்கும் என இறப்பதற்கு முன்பு சக நடிகர்களிடம் அம்ரேஷ் மகாஜன் கூறிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!