India
இந்தி திணிப்பை எதிர்க்க கைகோர்க்கும் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே : NEP-க்கு எதிர்ப்பு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசு இந்தி திணிப்பு செய்துவருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அந்த மாநில பாஜக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், இந்தி மொழி திணிப்பில் இருந்து விலகினார். இந்தி திணிக்கப்படாது என்றும் அவர் அறிவித்தார்.
இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை இந்தி மொழியை திணிக்க மகாராஷ்டிரா பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இந்தி திணிப்பு செய்வதற்கும், தேசியக் கல்விக் கொள்கை மூலம் மும்மொழிக் கொள்கையை மெல்ல மெல்ல திணிக்கும் முயற்சியை கண்டு கொண்ட முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவும், அவரது சகோதரரும் மகாராஷ்டிரா நவநிர்மான் கட்சியின் தலைவருமான ராஜ் தாக்கரே இருவரும் மாபெரும் போராட்டம் அறிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக எதிரும் புதிருமாக இருந்த சகோதரர்கள், மாநில மற்றும் மராத்தி மொழி பாதுகாப்பதற்காக முதல் முறையாக கைகோர்த்துள்ளனர். மும்மொழிக்கு எதிராக தமிழ்நாட்டில் எழுந்த குரல் இன்று மகாராஷ்டிரா வரை சென்றுள்ளது.
Also Read
-
கொ.ம.தே.க-விற்கு 2 சீட் ஒதுக்கீடு: கொங்கு மண்டலத்தில் தி.மு.க மிகப்பெரிய வெற்றி பெறும் - ஈஸ்வரன் பேட்டி!
-
தூத்துக்குடியில் ரூ.13,000 கோடியில் மிக உய்ய அனல் மின் நிலையம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!
-
“இருந்து போராட வேண்டும்; அதன் பயனை நாம் இருந்து காண வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
-
தமிழ்நாடுக்கு திட்டங்களும் இல்லை! சிலிண்டரும் இல்லை! - தி.மு.க கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
-
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!