India
இந்தி திணிப்பை எதிர்க்க கைகோர்க்கும் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே : NEP-க்கு எதிர்ப்பு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசு இந்தி திணிப்பு செய்துவருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அந்த மாநில பாஜக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், இந்தி மொழி திணிப்பில் இருந்து விலகினார். இந்தி திணிக்கப்படாது என்றும் அவர் அறிவித்தார்.
இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை இந்தி மொழியை திணிக்க மகாராஷ்டிரா பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இந்தி திணிப்பு செய்வதற்கும், தேசியக் கல்விக் கொள்கை மூலம் மும்மொழிக் கொள்கையை மெல்ல மெல்ல திணிக்கும் முயற்சியை கண்டு கொண்ட முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவும், அவரது சகோதரரும் மகாராஷ்டிரா நவநிர்மான் கட்சியின் தலைவருமான ராஜ் தாக்கரே இருவரும் மாபெரும் போராட்டம் அறிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக எதிரும் புதிருமாக இருந்த சகோதரர்கள், மாநில மற்றும் மராத்தி மொழி பாதுகாப்பதற்காக முதல் முறையாக கைகோர்த்துள்ளனர். மும்மொழிக்கு எதிராக தமிழ்நாட்டில் எழுந்த குரல் இன்று மகாராஷ்டிரா வரை சென்றுள்ளது.
Also Read
-
பஞ்சராகும் பஞ்ச் டயலாக்... பழனிக்கே மொட்டை போடும் விஜய் ஆட்சி! - வறுத்தெடுத்த முரசொலி!
-
“தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரை தாமதமின்றி திறந்துவிட வலியுறுத்துவோம்!” : தி.மு.க சார்பில் தீர்மானம்!
-
“மக்களின் மனசாட்சியாய் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்படுவார்கள்!” : மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
‘புது வடிவம் பெறும் உலகக்கோப்பை கிரிக்கெட்.. ஐபிஎல் போல் எலிமினேட்டர் சுற்றுகள்.. சுவாரசியமான விதிகள்!’
-
பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி : விமர்சனம் செய்தவரை இரவோடு இரவாக கைது செய்த தவெக போலீஸ்!