India
"ஏர் இந்தியா விமானங்களை இயக்க தடை விதிக்க வேண்டும்" - உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் !
மே 20ம் தேதி, அஜய் பன்சால் என்பவரும், அவரது மனைவியும் டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமான மூலம் சிகாகோ சென்றதாகவும், விமானம் நடு வானில் பறக்கும் வரை விமானத்தின் ஏசி செயல்படவில்லை என்று புகார் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஏர் இந்தியா சார்பில் 10,000 ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது. எனினும் இதனால் பிற பயணிகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பதால் இது குறித்து நீதிமன்றத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி, ஏர் இந்தியா போயிங் ரக விமானங்களில் பாதுகாப்பு சோதனைகள் முடிவடையும் வரை விமானங்களை இயக்க தடை விதிக்க வேண்டும், புதிய பாதுகாப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
சமீபத்தில் அகமதாபாத்தில் இருந்து லண்டன் கிளம்பிய ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து ஏர் இந்தியா விமானத்தில் தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“உங்கள் வீட்டுப்பிள்ளை வேண்டுமா? எங்கிருந்தோ வந்து நாடகமாடுபவர் வேண்டுமா?” : பெரம்பூரில் முதல்வர் உரை!
-
”திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொடர திமுக ஆட்சி வேண்டும்” : சென்னையில் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு!
-
”ஓய்வின்றி உழைப்போம்.. திராவிட மாடல் 2.O ஆட்சி அமைப்போம்” : 75,000 BLA2-க்களுடன் முதலமைச்சர் பேச்சு!
-
எதிர்க்கட்சியினரை முடக்க சதி : செல்வப்பெருந்தகை இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை - முதலமைச்சர் கண்டனம்!
-
“ஆர்வக்கோளாறில் அரசியலுக்கு வந்துள்ளார் விஜய்” : நடிகர் சத்யராஜ் கடும் தாக்கு!