India
பிரதமர் மோடி தனது சர்வாதிகார அணுகுமுறையை கைவிட வேண்டும் : குடியரசு தினத்தன்று விவசாயிகள் பேரணி!
வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக கடந்த ஆண்டு நவம்பர் 26 முதல் பஞ்சாப் மற்றும் ஹரியாணா இடையேயான கானௌரி எல்லைப் பகுதியில் சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தால்லேவால், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், சம்யுக்த் கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில், குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் விவசாய சந்தைப்படுத்தல் தொடர்பான தேசியக் கொள்கை கட்டமைப்பை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 26-ஆம் தேதி, குடியரசு தினத்தன்று, நாடு முழுவதும் டிராக்டர், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனப் பேரணிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதமர் மோடி தனது சர்வாதிகார, உணர்ச்சியற்ற அணுகுமுறையை கைவிட்டுவிட்டு, நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
“ரயில்வே துறையை ஒழித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிக்கப்போவது யார்? : வெளியான Exit Polls முடிவுகள்!
-
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க கூட்டணியே ஆட்சி அமைக்கும்: உறுதி செய்த Exit Polls முடிவுகள்!
-
இஸ்லாமியச் சிறுமிக்கு இந்து பெற்றோர் : உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!
-
பா.ஜ.க ஆளும் மாநிலத்தின் அவலம் - உயிருக்குப் போராடிய கணவர்: மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!