India
பிரதமர் மோடி தனது சர்வாதிகார அணுகுமுறையை கைவிட வேண்டும் : குடியரசு தினத்தன்று விவசாயிகள் பேரணி!
வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக கடந்த ஆண்டு நவம்பர் 26 முதல் பஞ்சாப் மற்றும் ஹரியாணா இடையேயான கானௌரி எல்லைப் பகுதியில் சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தால்லேவால், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், சம்யுக்த் கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில், குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் விவசாய சந்தைப்படுத்தல் தொடர்பான தேசியக் கொள்கை கட்டமைப்பை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 26-ஆம் தேதி, குடியரசு தினத்தன்று, நாடு முழுவதும் டிராக்டர், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனப் பேரணிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதமர் மோடி தனது சர்வாதிகார, உணர்ச்சியற்ற அணுகுமுறையை கைவிட்டுவிட்டு, நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
“இருளகற்றும் ஒளி சூரியனிடம்தான் உண்டு!” : திராவிட முன்னேற்றக் கழகம் சூளுரை!
-
“மின்வெட்டு.. ரீல்ஸ் போடாமல்.. போர்க்கால நடவடிக்கை எடுங்கள்” : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளாசல்!
-
“தமிழ்நாட்டை உலுக்கிய சேலம் பாலியல் வன்கொடுமை சம்பவம்” - சிபிசிஐடி விசாரிக்க இடதுசாரிகள் வலியுறுத்தல்!
-
“கழகத் தலைவரின் அன்பில்.. தாயின் பரிவையும், தலைவனின் தன்னம்பிக்கையும் பார்க்கிறோம்” : தங்கம் தென்னரசு!
-
“அதிமுக. MLAக்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும் விஜய்; பாஜகவின் ஜெராக்ஸ்” : தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கு!