India
பிரதமர் மோடி தனது சர்வாதிகார அணுகுமுறையை கைவிட வேண்டும் : குடியரசு தினத்தன்று விவசாயிகள் பேரணி!
வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக கடந்த ஆண்டு நவம்பர் 26 முதல் பஞ்சாப் மற்றும் ஹரியாணா இடையேயான கானௌரி எல்லைப் பகுதியில் சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தால்லேவால், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், சம்யுக்த் கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில், குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் விவசாய சந்தைப்படுத்தல் தொடர்பான தேசியக் கொள்கை கட்டமைப்பை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 26-ஆம் தேதி, குடியரசு தினத்தன்று, நாடு முழுவதும் டிராக்டர், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனப் பேரணிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதமர் மோடி தனது சர்வாதிகார, உணர்ச்சியற்ற அணுகுமுறையை கைவிட்டுவிட்டு, நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!
-
”பாலம் சிறப்பானது ; பெயர் அதனினும் சிறப்பானது” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
"அரசு அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் அரசின் திட்டங்கள் மக்களை சேரும்" - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் போட்டிகள்... யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!