India
”ரூ.150 கோடி லஞ்ச பேரம் - பா.ஜ.க தலைவர் விஜயேந்திராவை பாதுகாக்கும் மோடி” : சித்தராமையா குற்றச்சாட்டு!
”எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபோது அவரது மகன் விஜயேந்திரா, சிறுபான்மை ஆணையத் தலைவரிடம் ரூ.150 கோடி லஞ்ச பேரம் நடத்தியதாக எழுந்த புகார் மீது பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?" என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா,” எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபோது அவரது மகன் விஜயேந்திரர் வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்பு அறிக்கை குறித்து மௌனம் காக்க ரூ.150 கோடி பேரம் நடந்துள்ளது.
இந்த பிரச்சனையில் பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது சந்தேகங்களையும் பல கேள்விகளையும் எழுப்புகிறது. வக்ஃப் சொத்துக் கொள்ளையில் ஈடுபட்ட விஜயேந்திரா உள்ளிட்டோரை பாஜக தலைமை கேடயமாக வைத்திருப்பது ஏன்?
எடியூரப்பா மற்றும் பொம்மையின் கீழ் பா.ஜ.க ஏற்கனவே வக்ஃப் சொத்துக்கள் தொடர்பான பதிவு நோட்டீஸ்களை வெளியிட்டதில் பெயர் போனது. இப்போது, இந்த லஞ்சக் குற்றச்சாட்டுகள் மற்றும் கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் பாஜகவில் விஜயேந்திராவின் அதிகரித்து வரும் பங்கு, கர்நாடகா பாஜகவின் ஏடிஎம் ஆக மாறியுள்ளது” குற்றம்சாட்டியுள்ளார்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!