India
”விலைவாசி உயர்வு குறித்து கவலைப்படாத மோடி அரசு” : தி.மு.க MP ராஜேஷ்குமார் குற்றச்சாட்டு!
அத்தியாவசியப் பொருட்களின் விலை அன்றாடம் உயர்ந்து வருவது குறித்து எந்த கவலையும் இல்லாமல் ஒன்றிய அரசு மெத்தனமா இருப்பதாக நாடாளுமன்றத்தில் தி.மு.க MP கே. ஆர். என். ராஜேஷ்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று மாநிலங்களவையில் பேசிய தி.மு.க MP கே. ஆர். என். ராஜேஷ்குமார்,"நுகர்வோருக்கு பொருட்கள் நியாய விலையில் கிடைப்பதை உறுதி செய்ய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என கேட்டுள்ளார். அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் தொடர்ந்து கண்காணிக்கவும் அவை லாபம் ஈட்டும் நோக்கில் பதுக்கப்படுகிறதா என அடையாளம் காணவும் வேண்டும் என கூறியுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களுக்கான போக்குவரத்து செலவுகளை குறைக்கும் வகையில் விநியோகச் சங்கிலியின் செயல்திறனை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல், நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் மூலப்பொருட்களின் மீதான ஜிஎஸ்டியை குறைத்திட வேண்டும் என தி.மு.க MP பி. வில்சன் மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய பி. வில்சன் MP, "உரங்கள் மற்றும் ரசாயனங்கள் மீதான நிலைக்குழு பரிந்துரையின்படி மூலப்பொருட்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது.
மேலும் இறக்குமதியை குறைக்கவும் அதே நேரத்தில் தேவையை பூர்த்திசெய்யவும் உள்நாட்டில் உர உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கையின் விவரங்கள் வெளியிடவேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
Also Read
-
தொகுதி மறுவரையறை : திமிரெடுத்த பாஜகவை அடங்கியே ஆக வேண்டும்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
“தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாளை (ஏப்.16) கருப்புக்கொடிப் போராட்டம்!” : முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
-
தொகுதி மறுவரையறை : வடக்கிற்கு ஆதாயம்... தெற்கிற்கு இழப்பு... தமிழ்நாடு சந்திக்கவிருக்கும் பேராபத்து என்ன?
-
“வேளாண்மையில் தாக்குதல் நடத்துவது பா.ஜ.க.வுக்கு புதிதல்ல!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“தி.மு.க.வின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்!“: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!