India
”அதிகரிக்கும் விமான கட்டணத்தை ஒழுங்குபடுத்த ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?” : வில்சன் MP கேள்வி!
மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, கடந்த ஆறு காலாண்டுகளில் உள்நாட்டு விமான கட்டணம் 40%க்குமேல் அதிகரித்துள்ளது குறித்து தி.மு.க எம்.பி வில்சன் கேள்வி எழுப்பி பேசினார்.
அப்போது வில்சன் MP,"நாட்டிலுள்ள விமான போக்குவரத்து நிறுவனங்கள் செயற்கையான பற்றாக்குறையை உருவாக்கி விமான கட்டணத்தை அதிகரிக்கச் செய்கின்றனர். இதை ஒழுங்குபடுத்துவதற்கு அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன?
அதிக விமான நிலையக் கட்டணங்கள் வசூலிப்பதில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டு சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் அறிக்கை விடுத்துள்ளது, இதற்கு ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும்.
விமான நிலையங்கள் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் தற்போதுள்ள விமான நிலையக் கட்டணங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!