India
இலங்கையில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் சிறப்பு செய்ய வேண்டும்! : தொல்.திருமாவளவன் கடிதம்!
இலங்கை பல்கலைக்கழகங்களில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தங்கப் பதக்கமும், ரொக்கப் பரிசும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வி.சி.க தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கை தெற்கு பகுதியில் உள்ள சபரகமுவ பல்கலைக்கழகத்தில் இந்தியில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவியருக்கு தங்கப் பதக்கம் மற்றும் 25,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், இலங்கையில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு இதுபோன்ற விருதுகளும், ஊக்கத்தொகையும் வழங்கப்படுவதில்லை. இலங்கையில் உள்ள தமிழர்கள் வரலாற்று ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டுள்ளனர்.
இந்தச் சூழலில், தமிழைக் கவனிக்காமல், இந்தியை ஆதரிப்பது ஒரு சார்பு உணர்வை உருவாக்குகிறது. எனவே, இலங்கையில் உள்ள சபரகமுவ பல்கலைக்கழகம் மற்றும் பிற பல்கலைக்கழகங்களில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தங்கப் பதக்கம் மற்றும் ரொக்கப் பரிசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!