India
Phone Pe செயலியை பயன்படுத்தி மோசடி : சம்மந்தப்பட்ட நிறுவனங்களை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு !
பணபரிவர்த்தனை செயலியை தவறாக பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி போன்-பே நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அதில், தங்கள் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி சிலர் பணபரிவர்த்தனைகள் செய்து தங்கள் நிறுவனத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதால், பண மோசடி செய்யும் நிறுவனத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
அது போன்ற நிறுவனங்களை உடனடியாக கண்டறிந்து தொடர்ந்து மோசடி நடக்காமல் முடக்குவதுடன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஒன்றய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மோசடி செய்யும் நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
அதே நேரம் ஆரம்பகட்டத்தில் மோசடி செய்யும் நிறுவனத்தை கண்டறிந்து முடக்க முடியாது. எந்த நிறுவனம் பண மோசடியில் ஈடுபட்டது என உறுதி செய்யப்பட்டதும் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எந்த நிறுவனத்தால் பாதிப்பு என போன்-பே நிறுவனம் இ-மெயில் மூலமாகவும் புகார் அளித்தால் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மோசடி குறித்து சம்பந்தப்பட்ட பணபரிவர்த்தனைக்கான யூ.ஆர்.எல் கணக்கு ஐடியை ஒன்றிய அரசுக்கு போன்-பே நிறுவனம் வழங்க வேண்டும். அந்த ஐடியின் மீது தொடர்ந்து பண பரிவத்தனை செய்யாத வகையில் முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
Also Read
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,62,864 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!
-
“நீங்கள் மற்றவர்களுக்கு Inspire ஆக இருக்க வேண்டும்”: மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000! : நாளை (ஜன.8) தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“Very sorry உங்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
”எங்கள் வெற்றியைத் தடுப்பதற்கு எந்த சக்தியாலும் முடியாது” : அமைச்சர் ரகுபதி பேட்டி!