India
வீடுபுகுந்து துப்பாக்கிச் சூடு - 2 பேர் பலி : டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!
வடகிழக்கு டெல்லிக்கு உட்பட்ட ஷாதாரா பகுதியில் நேற்று இரவு ஆகாஷ் ஷர்மா குடும்பத்தினர் வீட்டிற்கு வெளியே தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடி கொண்டிருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த இருவர் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஆகாஷ் ஷர்மா மற்றும் அவரது மருமகன் ரிஷப் சர்மா ஆகியேர் உயிரிழந்தனர். மேலும் மகன் கரிஷ் ஷர்மா படுகாயம் அடைந்தார்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முற்கட்ட விசாரணையில், குற்றவாளிகளுக்கும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நிலம் தொடர்பான பிரச்சனை காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த கொலை சம்பவம் குறித்து போலிஸார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வீடுபுகுந்து 2 பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ரயில்வே துறையை ஒழித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிக்கப்போவது யார்? : வெளியான Exit Polls முடிவுகள்!
-
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க கூட்டணியே ஆட்சி அமைக்கும்: உறுதி செய்த Exit Polls முடிவுகள்!
-
இஸ்லாமியச் சிறுமிக்கு இந்து பெற்றோர் : உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!
-
பா.ஜ.க ஆளும் மாநிலத்தின் அவலம் - உயிருக்குப் போராடிய கணவர்: மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!