India
வீடுபுகுந்து துப்பாக்கிச் சூடு - 2 பேர் பலி : டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!
வடகிழக்கு டெல்லிக்கு உட்பட்ட ஷாதாரா பகுதியில் நேற்று இரவு ஆகாஷ் ஷர்மா குடும்பத்தினர் வீட்டிற்கு வெளியே தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடி கொண்டிருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த இருவர் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஆகாஷ் ஷர்மா மற்றும் அவரது மருமகன் ரிஷப் சர்மா ஆகியேர் உயிரிழந்தனர். மேலும் மகன் கரிஷ் ஷர்மா படுகாயம் அடைந்தார்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முற்கட்ட விசாரணையில், குற்றவாளிகளுக்கும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நிலம் தொடர்பான பிரச்சனை காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த கொலை சம்பவம் குறித்து போலிஸார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வீடுபுகுந்து 2 பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!
-
“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
5 ஆண்டுகளில் TNPSC, தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி ஆணை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
அரசுக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்கள் : பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!