India
வீடுபுகுந்து துப்பாக்கிச் சூடு - 2 பேர் பலி : டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!
வடகிழக்கு டெல்லிக்கு உட்பட்ட ஷாதாரா பகுதியில் நேற்று இரவு ஆகாஷ் ஷர்மா குடும்பத்தினர் வீட்டிற்கு வெளியே தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடி கொண்டிருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த இருவர் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஆகாஷ் ஷர்மா மற்றும் அவரது மருமகன் ரிஷப் சர்மா ஆகியேர் உயிரிழந்தனர். மேலும் மகன் கரிஷ் ஷர்மா படுகாயம் அடைந்தார்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முற்கட்ட விசாரணையில், குற்றவாளிகளுக்கும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நிலம் தொடர்பான பிரச்சனை காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த கொலை சம்பவம் குறித்து போலிஸார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வீடுபுகுந்து 2 பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!