India
வீடுபுகுந்து துப்பாக்கிச் சூடு - 2 பேர் பலி : டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!
வடகிழக்கு டெல்லிக்கு உட்பட்ட ஷாதாரா பகுதியில் நேற்று இரவு ஆகாஷ் ஷர்மா குடும்பத்தினர் வீட்டிற்கு வெளியே தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடி கொண்டிருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த இருவர் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஆகாஷ் ஷர்மா மற்றும் அவரது மருமகன் ரிஷப் சர்மா ஆகியேர் உயிரிழந்தனர். மேலும் மகன் கரிஷ் ஷர்மா படுகாயம் அடைந்தார்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முற்கட்ட விசாரணையில், குற்றவாளிகளுக்கும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நிலம் தொடர்பான பிரச்சனை காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த கொலை சம்பவம் குறித்து போலிஸார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வீடுபுகுந்து 2 பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இலக்கிய மாமணி விருதுகள் 2024 : 3 தமிழறிஞர்களுக்கு வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.20.89 கோடியில் 4 முடிவுற்ற பணிகள்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இவைதான் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் மோடி செய்யும் தாக்குதல்கள்..” - பட்டியலிட்டு முரசொலி காட்டம்!
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!