India
இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு உழைப்போம்! : இந்தியா கூட்டணி கட்சிகள் உறுதி!
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களும், கேரளாவின் வயநாடு உள்ளிட்ட தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும், நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு, மக்களாட்சி உரிமை பெற்ற ஜம்மு - காஷ்மீர் மக்கள், ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலின் வழி பா.ஜ.க.வை புறக்கணித்து, இந்தியா கூட்டணி ஆட்சியை நிறுவியுள்ளனர்.
அரியானா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவின் போது பல்வேறு குழப்பங்கள் எழுந்த நிலையில், அது சார்ந்த விசாரணைகளை மேற்கொள்ள இந்தியா கூட்டணி வற்புறுத்தியுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறது இந்தியா கூட்டணி.
இந்தியா கூட்டணி சார்பில், நடைபெற இருக்கும் தேர்தல்களுக்கான தொகுதி பங்கீடுகள், சுமார் 99 விழுக்காடு நிறைவடைந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் நடவடிக்கைகள் அனைத்து இடங்களிலும் விறுவிறுப்பான நடைபெற்று வருகின்றன.
இதனிடையில், தேர்தல்களை சந்திக்கும் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ், சிவசேனா (தாக்கரே), ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், “இந்தியா கூட்டணியின் வெற்றியே, முதன்மை இலக்கு. ஒன்றிணைந்து போட்டியிட்டு மக்களாட்சி உரிமைகளை மீட்டெடுப்போம்” என தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து, இந்தியா கூட்டணியின் தலைவர்கள், இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரங்களை தீவிரமாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!