India
இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு உழைப்போம்! : இந்தியா கூட்டணி கட்சிகள் உறுதி!
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களும், கேரளாவின் வயநாடு உள்ளிட்ட தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும், நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு, மக்களாட்சி உரிமை பெற்ற ஜம்மு - காஷ்மீர் மக்கள், ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலின் வழி பா.ஜ.க.வை புறக்கணித்து, இந்தியா கூட்டணி ஆட்சியை நிறுவியுள்ளனர்.
அரியானா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவின் போது பல்வேறு குழப்பங்கள் எழுந்த நிலையில், அது சார்ந்த விசாரணைகளை மேற்கொள்ள இந்தியா கூட்டணி வற்புறுத்தியுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறது இந்தியா கூட்டணி.
இந்தியா கூட்டணி சார்பில், நடைபெற இருக்கும் தேர்தல்களுக்கான தொகுதி பங்கீடுகள், சுமார் 99 விழுக்காடு நிறைவடைந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் நடவடிக்கைகள் அனைத்து இடங்களிலும் விறுவிறுப்பான நடைபெற்று வருகின்றன.
இதனிடையில், தேர்தல்களை சந்திக்கும் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ், சிவசேனா (தாக்கரே), ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், “இந்தியா கூட்டணியின் வெற்றியே, முதன்மை இலக்கு. ஒன்றிணைந்து போட்டியிட்டு மக்களாட்சி உரிமைகளை மீட்டெடுப்போம்” என தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து, இந்தியா கூட்டணியின் தலைவர்கள், இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரங்களை தீவிரமாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர்.
Also Read
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
-
“எதிர்க்கட்சித் தலைவர் கைது.. பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பயந்த பாசிச தவெக அரசு” : துரைமுருகன் கண்டனம்!