India
வாங்கிய சிகரெட்டுக்கு பணம் தரமறுத்து பெட்டிக்கடை ஊழியர் மீது தாக்குதல் : புதுச்சேரியில் அதிர்ச்சி!
புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்தவர் வசந்த். இவர் 100 அடி சாலையில் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு நேற்று இரவு மது போதையில் மூன்று இளைஞர்கள் வந்துள்ளனர். அப்போது, அவர்கள் சிகரெட் வாங்கியுள்ளனர். இதற்கு கடையில் இருந்த ஊழியர் சந்திரன் என்பவர் பணம் கேட்டுள்ளார்.
இதற்கு அந்த இளைஞர்கள் யாரிடம் பணம் கேட்கிறாய்? என கூறி சந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதை தடுத்த கடையின் உரிமையாளரையும் தாக்கிவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தற்போது, பெட்டிக்கடை ஊழியரை தாக்கிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து போலிஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து மது போதையில் தகராறு செய்த மூன்று இளைஞர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!
-
“CBSE பள்ளிகளுக்கு NOC சான்றிதழ்.. சட்டம் தெரியுமா? தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கூறும் பொய்!”
-
உணவுக்குப் பதில் பிஸ்கட் : காலை உணவு திட்டத்தில் அலட்சியம் காட்டும் த.வெ.க அரசு!
-
“நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!