India
வாங்கிய சிகரெட்டுக்கு பணம் தரமறுத்து பெட்டிக்கடை ஊழியர் மீது தாக்குதல் : புதுச்சேரியில் அதிர்ச்சி!
புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்தவர் வசந்த். இவர் 100 அடி சாலையில் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு நேற்று இரவு மது போதையில் மூன்று இளைஞர்கள் வந்துள்ளனர். அப்போது, அவர்கள் சிகரெட் வாங்கியுள்ளனர். இதற்கு கடையில் இருந்த ஊழியர் சந்திரன் என்பவர் பணம் கேட்டுள்ளார்.
இதற்கு அந்த இளைஞர்கள் யாரிடம் பணம் கேட்கிறாய்? என கூறி சந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதை தடுத்த கடையின் உரிமையாளரையும் தாக்கிவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தற்போது, பெட்டிக்கடை ஊழியரை தாக்கிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து போலிஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து மது போதையில் தகராறு செய்த மூன்று இளைஞர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!