India
இடைத்தேர்தல் செலவுக்காக ரூ. 50 கோடி கேட்டு மிரட்டல்! : ஒன்றிய அமைச்சர் குமாரசாமி மீது வழக்குப்பதிவு!
கர்நாடக மாநிலம் பெங்களூரு அம்ருதஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் விஜய் டாடா. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் ஒன்றிய கனரகத்துறை அமைச்சர் குமாரசாமி மற்றும் JD(S) பிரமுகர் ரமேஷ் கவுடா ஆகியோர் மீது அம்ருதஹள்ளி காவல்துறையில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
விஜய் டாடாவின் புகார் மனுவில், “சென்னப்பட்டணா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுவதாக கூறப்பட்டது. இது தொடர்பாக அக்கட்சி பிரமுகர் ரமேஷ் கவுடா என்னை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது நிகில் குமாரசாமி தேர்தல் செலவுக்கு ரூ.50 கோடி வழங்கும்படி கூறினார். மேலும் ஒன்றிய அமைச்சர் குமாரசாமியும் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.50 கோடி கேட்டார். அதற்கு நான் தற்போது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கேட்கும் அளவு பணம் கொடுக்க முடியாது என்று கூறினேன். அதற்கு குமாரசாமி, பணம் கொடுக்கவில்லை என்றால் வியாபாரம் நடத்த முடியாது என்று மிரட்டினார்.
ஏற்கனவே ரமேஷ் கவுடா கோவில் கட்டுவதாக கூறி ரூ.5 கோடி பணம் வாங்கினார். தற்போது மீண்டும் பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர். எனவே இது தொடர்பாக குமாரசாமி மற்றும் ரமேஷ் கவுடா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
இந்த புகாரின் பேரில் அம்ருதஹள்ளி காவல்துறை ஒன்றிய அமைச்சர் குமாரசாமி மற்றும் ரமேஷ் கவுடா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது BNS 3 (5) (புண்படுத்தும் வகையில் பேசுவது), 308 (2) (வழிப்பறி), 351 (2) (மிரட்டல்) ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே அவர் மீது நில முறைகேடு வழக்கு பதிவாகி இருந்த நிலையில், தற்போது மிரட்டல் புகாரின்பேரில் 3 வழக்குகள் பதிவாகி இருப்பது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மீண்டும் தி.மு.க ; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : உறுதிபடுத்திய ABP நாடு கருத்துக்கணிப்பு!
-
“தொகுதி மறுவரையறை பா.ஜ.க-வின் அரசின் அரசியல் சதித் திட்டம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!
-
🔴LIVE : சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம் – கேரளம், புதுச்சேரி, அசாம் வாக்குப்பதிவு நிலவரம்!
-
குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை தந்துவிட்டது : அப்போ எடப்பாடி பழனிசாமிக்கு? - முரசொலி தலையங்கம்!
-
“தரம்கெட்டுப் பேசும் பழனிசாமிக்கு மக்களே தக்க பதிலடி கொடுப்பார்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!