India
10 நாள் செயல்பட்டு வந்த போலி SBI வங்கி : பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலத்தில் அவலம்!
சத்தீஸ்கர் மாநிலத்திற்குட்பட்டது சோப்ரா கிராமம். இந்த கிராமத்தில் புதிதாக SBI வங்கி கிளை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. பிரபலமான வங்கி என்பதால் கிராம மக்கள் வங்கி கணக்கை தொடங்கி பரிவர்த்தனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் புதிதாக தொடக்கப்பட்ட வங்கி குறித்து, மற்றொரு கிராமத்தில் செயல்பட்டு வந்த SBI வங்கி கிளை மேலாளர் உயரதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அப்போதுதான் அந்த கிராமத்தில் SBI வங்கி தொடங்கப்பட வில்லை என்றும் SBI பெயரில் போலி வங்கி செயல்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.
உடனே இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பிறகு அங்கு சென்று விசாரணை செய்தபோதுதான், 10 நாட்களாக போலியாக வங்கி செயல்பட்டுவந்தது தெரியவந்தது. மேலும் ரூ. 2 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு வங்கியில் 4 பேருக்கு வேலை கொடுத்து ஏமாற்றியதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த மோசடி குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த போலி வங்கிக்கு பின்னால் யார்? யார்? இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Also Read
-
மேகதாது அணை.. கர்நாடக செல்லும் முதல்வர் விஜய்.. வீடியோ போடலாம், விடியலைத் தராது: எச்சரிக்கும் முரசொலி!
-
“முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை!”: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!