India
சிறையில் சாதிய பாகுபாடுகள் கூடாது! : உச்சநீதிமன்றம் உத்தரவு!
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களின் சிறைகளில் பட்டியலின, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த விளிம்பு நிலை மக்களை தாழ்த்தும் வகையில் வேலைகளை ஒதுக்கி, சாதிய பாகுபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலை தொடர்ந்து வருகிறது.
குறிப்பாக, எடுபுடி வேலைகளுக்கு என்று குறிப்பிட்ட சிலரை நியமிப்பது இந்திய அரசியலமைப்பிற்கு எதிரான வகையில் அமைந்துள்ளது என்ற வழக்கில், கண்டனத்துடன் தீர்ப்பு வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
இது குறித்து, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில்,
“பட்டியலின, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த விளிம்பு நிலை மக்களை சிறைகளில் பாகுபாடுடன் நடத்தக்கூடாது.
தண்டனை குறைப்பு, சிறைகளில் சுத்தம்செய்வது, சமையல் செய்வது போன்ற பணிகளில் சாதி சார்ந்த பாகுபாடு காட்டக் கூடாது.
சாதி கட்டமைப்பால் விளிம்பு நிலை மக்கள் நுற்றாண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளனர். அது தற்போதும் தொடர்வது அரசியலமைப்பு பிரிவுகள் 14, 15-க்கு எதிரானது.
Habitual Criminals என்று குறிப்பிடும் சிறை விதிமுறைகள் அரசியல் சாசனம் 14,15,17,21,23 க்கு எதிரானது. எனவே, சிறை விதிமுறைகளையும் 3 மாதத்தில் மாற்ற வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“பாசிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற இளைஞர் அணி எப்போதும் தயார்” : துணை முதலமைச்சர் உதயநிதி !
-
கன்னியாகுமரி to சென்னை.. 6 நாட்கள் மகளிர் விடியல் பேருந்துகளில் பயணம்... பிரமிக்க வைத்த 2 பெண்கள்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஜீரோ சொன்ன பாஜகவுக்கு தேர்தலில் ஜீரோதான் கிடைக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
6வது முறையாக U19 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! ஒரே தொடரில் சாதனை மேல் சாதனை! - முழுவிவரம் உள்ளே
-
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை எப்போது தாக்கல்? : சபாநாயகர் அப்பாவு சொன்ன தகவல்!