India
சிறையில் சாதிய பாகுபாடுகள் கூடாது! : உச்சநீதிமன்றம் உத்தரவு!
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களின் சிறைகளில் பட்டியலின, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த விளிம்பு நிலை மக்களை தாழ்த்தும் வகையில் வேலைகளை ஒதுக்கி, சாதிய பாகுபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலை தொடர்ந்து வருகிறது.
குறிப்பாக, எடுபுடி வேலைகளுக்கு என்று குறிப்பிட்ட சிலரை நியமிப்பது இந்திய அரசியலமைப்பிற்கு எதிரான வகையில் அமைந்துள்ளது என்ற வழக்கில், கண்டனத்துடன் தீர்ப்பு வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
இது குறித்து, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில்,
“பட்டியலின, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த விளிம்பு நிலை மக்களை சிறைகளில் பாகுபாடுடன் நடத்தக்கூடாது.
தண்டனை குறைப்பு, சிறைகளில் சுத்தம்செய்வது, சமையல் செய்வது போன்ற பணிகளில் சாதி சார்ந்த பாகுபாடு காட்டக் கூடாது.
சாதி கட்டமைப்பால் விளிம்பு நிலை மக்கள் நுற்றாண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளனர். அது தற்போதும் தொடர்வது அரசியலமைப்பு பிரிவுகள் 14, 15-க்கு எதிரானது.
Habitual Criminals என்று குறிப்பிடும் சிறை விதிமுறைகள் அரசியல் சாசனம் 14,15,17,21,23 க்கு எதிரானது. எனவே, சிறை விதிமுறைகளையும் 3 மாதத்தில் மாற்ற வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!