India
45ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர்! : இந்தியா தங்கம் வென்று சாதனை!
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடரில், உலக நாடுகளை அடையாளப்படுத்தி தலைசிறந்த செஸ் வீரர்கள் பங்கேற்று வருகின்றனர்.
1924ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் தொடர் நடந்து கொண்டிருக்கும் போது தான், முதலாவது அதிகாரப்பூர்வ செஸ் ஒலிம்பியாட் பாரிஸில் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சி, இரண்டாம் உலகப்போரால் தடைப்பட்டது என்றாலும், 1950ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தவறாமல் செஸ் ஒலிம்பியாட் நடத்தப்பட்டு வருகிறது. இதனை பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) நடத்தி வருகிறது.
இடையில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட சூழலில் மட்டும், 2020ஆம் ஆண்டிற்கு மாற்றாக 2021ஆம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் நடத்தப்பட்டது. 2022ஆம் ஆண்டு 44ஆவது செஸ் ஒலிம்பியாட்டை இந்தியா சார்பில் தமிழ்நாடு அரசு தலைமையேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தியது.
இதனால், உலகத்தின் பார்வை, தமிழ்நாட்டின் மீது விழுந்தது. இத்தொடரில் தமிழ்நாட்டின் செஸ் வீரர்களும், தங்களின் திறமையை உலக அரங்கில் முன்னிறுத்தினர்.
இந்நிலையில், 2024ஆம் ஆண்டிற்கான 45ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஹங்கேரியில் நடைபெற்றது. இத்தொடரின் தொடக்கத்திலிருந்தே முன்னிலை வகித்த இந்திய அணி, வரலாற்றில் முதன்முறையாக தங்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளது.
இந்திய ஆடவர் அணி, இந்திய பெண்கள் அணி என இரு அணிகளும் சிறப்பாக விளையாடி, இரு தங்கம் வென்றது, இந்தியாவிற்கு கூடுதல் சிறப்பைத் தேடித்தந்துள்ளது.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!