India
சீதாராம் ஜெய்சூரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சுவாசக் கோளாறு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்று அவர் காலமானார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் சீதாராம் யெச்சூரியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சீதாராம் ஜெய்சூரியின் உடலுக்கு மலவர் வளையம் வைத்து அஞ்சி செலுத்தினார். அதேபோல் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்ட தி.மு.க எம்.பிகளும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து சீதாராம் ஜெய்சூரியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வுக்காகவும் கல்விக்காகவும் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.
Also Read
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!