India
”எனக்கும் நீதி வேண்டும்” : ஆளுநர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் கூறிய பெண் கோரிக்கை!
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.நகர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து மேற்கு வங்க மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான மாநில அரசு, அபராஜிதா பெண் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மசோதாவை கடந்த 3-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இதன்படி, பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை 21 நாட்களில் போலீசார் முடிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் மரணமடைந்தால், குற்றவாளிக்கு தூக்கு தண்டன் விதிக்க வேண்டும் என்பன போன்ற சட்டப் பிரிவுகள் உள்ளன.
இந்த மசோதா ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆனந்த போஸ் மேற்குவங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதாவை குடியரசுத்தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், எனக்கும் நீதி வேண்டும் என மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் வைத்துள்ள பெண் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து பேசிய அப்பெண், “எனக்கும் நீதி வேண்டும். நான் ஒரு சாதாரண ஊழியர் என்பதால் மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீது இதுவரை விசாரணை எதுவும் நடைபெறாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. ஆனால் இன்று நிலைமை மாறி இருக்கிறது. இதனை வரவேற்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!