India
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அரசு அதிகாரி : ஆய்வுக்கு சென்றபோது நடந்த கொடூரம்... உ.பி-யில் அதிர்ச்சி!
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த கஜேந்திர சிங் (வயது 57) என்ற அரசு அதிகாரி வேளாண் மேம்பாட்டு துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் ஆய்வுக்காக பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் நிலையில், பலந்த்ஷாஹரி என்ற கிராமத்துக்கும் அவ்வாறு சென்றுள்ளார்.
அந்த கிராமத்தில் 6 வயது சிறுமி ஒருவர் தனியே வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அதனை கண்ட கஜேந்திர சிங் அந்த சிறுமியை மிரட்டி வீட்டுக்குள் அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவரின் வாயை பொத்தி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனை அங்கிருந்த சிறுவன் ஒருவர் பார்த்து ஊர் பெரியவர்களிடம் கூறியுள்ளார். ஆனால், அவர்கள் வருவதற்குள் கஜேந்திர சிங் அந்த கிராமத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் மீது கிராமமக்கள் அளித்த புகாரின் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்த கஜேந்திர சிங் தலைமறைவாகியுள்ளார். எனினும் தலைமறைவாக இருந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு அதிகாரி ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுமியின் குடும்பத்துக்கு உத்தரபிரதேச அரசு சார்பில் ரூ.8.25 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“ரூ.86.40 இலட்சம் மதிப்பீட்டில் வீடற்றோருக்கான இரவுநேர காப்பகம் திறப்பு!” : முழு விவரம் உள்ளே!
-
‘இந்தி எதிர்ப்புப் போராட்டம் – முழுமையான அரசு ஆவணங்கள்’ நூல் வெளியீடு! : முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டின் வளர்ச்சியே முதன்மையானது” : தி.மு.க தேர்தல் அறிக்கை குறித்து கனிமொழி எம்.பி பேட்டி!
-
காவல்துறை, தீயணைப்புத் துறை, போக்குவரத்துத் துறைகளுக்கான புதிய கட்டடங்கள் திறப்பு... என்னென்ன? விவரம்!
-
ரூ.210.17 கோடியில் அரசுப் பள்ளிகளுக்கான புதிய கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!