India
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அரசு அதிகாரி : ஆய்வுக்கு சென்றபோது நடந்த கொடூரம்... உ.பி-யில் அதிர்ச்சி!
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த கஜேந்திர சிங் (வயது 57) என்ற அரசு அதிகாரி வேளாண் மேம்பாட்டு துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் ஆய்வுக்காக பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் நிலையில், பலந்த்ஷாஹரி என்ற கிராமத்துக்கும் அவ்வாறு சென்றுள்ளார்.
அந்த கிராமத்தில் 6 வயது சிறுமி ஒருவர் தனியே வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அதனை கண்ட கஜேந்திர சிங் அந்த சிறுமியை மிரட்டி வீட்டுக்குள் அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவரின் வாயை பொத்தி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனை அங்கிருந்த சிறுவன் ஒருவர் பார்த்து ஊர் பெரியவர்களிடம் கூறியுள்ளார். ஆனால், அவர்கள் வருவதற்குள் கஜேந்திர சிங் அந்த கிராமத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் மீது கிராமமக்கள் அளித்த புகாரின் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்த கஜேந்திர சிங் தலைமறைவாகியுள்ளார். எனினும் தலைமறைவாக இருந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு அதிகாரி ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுமியின் குடும்பத்துக்கு உத்தரபிரதேச அரசு சார்பில் ரூ.8.25 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
தேர்தல் ஆணையத்தை கொண்டு மக்களாட்சிக்கு வேட்டு வைக்கும் பா.ஜ.க : முரசொலி கண்டனம்!
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?