India
”பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் பிரதமர் மோடி” : பிரியங்கா காந்தி விமர்சனம்!
18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் நான்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்னும் மூன்று கட்ட தேர்தல் உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதியில் போட்டியிடும் கிஷோரி லால் ஷர்மாவை ஆதரித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, " ஆட்சிக்காலத்தில் ஏழை எளியோரை,பிரதமர் மோடி சந்தித்தது உண்டா? வேலையில்லாத் திண்டாட்டம், விண்ணை முட்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை பத்து ஆண்டுகளில் செய்து விட்டதாக பொய் மூட்டைகளை மோடி அவிழ்த்து விடுகிறார்.
ஒரு சில பெரும் செல்வந்தர்களுக்கு மட்டுமே பிரதமர் மோடி ஆட்சி நடத்தினார். ஆனால் இந்தியா கூட்டணி அரசு, ஒவ்வொரு ஏழைகளையும் செல்வந்தர்களாக உயர்த்தும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !