India
4-ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு! : 22 நாட்களில் தேர்தல் முடிவு!
இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதெசங்களில் நடைபெறும், நாடாளுமன்ற மக்களவை தேர்தல், 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில்,
முதல் 3 கட்ட வாக்குப்பதிவு நிறைவுற்று, இன்று (13.05.24) மாலை 6 மணியுடன் 4ஆம் கட்ட வாக்குப்பதிவும் நிறைவுற்றது.
இந்த முதல் 4 கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுகளின் போதே, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் சட்டமன்ற தேர்தல்களுக்கான வாக்குப்பதிவும் நிறைவுற்றுள்ளது.
4ஆம் கட்ட மக்களவை தேர்தலில், ஆங்காங்கே வன்முறை வெடித்த நிலையிலும், பா.ஜ.க.வினர் சில இடங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையிலும், மாலை 6 மணியுடன்,
ஆந்திரா, பீகார், ஒடிசா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவுற்றது.
மேலும், 3 கட்ட வாக்குப்பதிவுகள் நிலுவையில் இருக்கிற நிலையில், ஜுன் 4 அன்று தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கிறது.
Also Read
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!