India
4-ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு! : 22 நாட்களில் தேர்தல் முடிவு!
இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதெசங்களில் நடைபெறும், நாடாளுமன்ற மக்களவை தேர்தல், 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில்,
முதல் 3 கட்ட வாக்குப்பதிவு நிறைவுற்று, இன்று (13.05.24) மாலை 6 மணியுடன் 4ஆம் கட்ட வாக்குப்பதிவும் நிறைவுற்றது.
இந்த முதல் 4 கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுகளின் போதே, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் சட்டமன்ற தேர்தல்களுக்கான வாக்குப்பதிவும் நிறைவுற்றுள்ளது.
4ஆம் கட்ட மக்களவை தேர்தலில், ஆங்காங்கே வன்முறை வெடித்த நிலையிலும், பா.ஜ.க.வினர் சில இடங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையிலும், மாலை 6 மணியுடன்,
ஆந்திரா, பீகார், ஒடிசா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவுற்றது.
மேலும், 3 கட்ட வாக்குப்பதிவுகள் நிலுவையில் இருக்கிற நிலையில், ஜுன் 4 அன்று தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கிறது.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !