India
4-ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு! : 22 நாட்களில் தேர்தல் முடிவு!
இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதெசங்களில் நடைபெறும், நாடாளுமன்ற மக்களவை தேர்தல், 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில்,
முதல் 3 கட்ட வாக்குப்பதிவு நிறைவுற்று, இன்று (13.05.24) மாலை 6 மணியுடன் 4ஆம் கட்ட வாக்குப்பதிவும் நிறைவுற்றது.
இந்த முதல் 4 கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுகளின் போதே, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் சட்டமன்ற தேர்தல்களுக்கான வாக்குப்பதிவும் நிறைவுற்றுள்ளது.
4ஆம் கட்ட மக்களவை தேர்தலில், ஆங்காங்கே வன்முறை வெடித்த நிலையிலும், பா.ஜ.க.வினர் சில இடங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையிலும், மாலை 6 மணியுடன்,
ஆந்திரா, பீகார், ஒடிசா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவுற்றது.
மேலும், 3 கட்ட வாக்குப்பதிவுகள் நிலுவையில் இருக்கிற நிலையில், ஜுன் 4 அன்று தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கிறது.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?