India
இந்தியாவிற்கு அவப்பெயர் தேடி தந்த மோடி! : முதலீடு செய்ய தாமதிக்கும் Tesla!
மக்கள் தொகை அதிகரிப்பினாலும், மாநில அரசுகளின் துரித நடவடிக்கைகளாலும், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் சென்றுகொண்டிருக்க,
அதற்கு, மோடியின் ஆட்சி தான் காரணம் என தெரிவிக்கும் பா.ஜ.க.வினரின் முகங்களில், உலக நிறுவனங்களும், அரசுகளும் தொடர்ந்து கரியை பூசி வருகின்றனர்.
அவ்வகையில், தனிமனித பாதுகாப்பில் சிதைவை உண்டாக்க விரும்பும் ஒன்றிய பா.ஜ.க.வின் செயலை கண்டித்து, Whatsapp - இந்தியாவை விட்டு வெளியேற எச்சரிக்கை விடுத்து சில நாட்களே கடந்த நிலையில்,
எலன் மஸ்கின் இந்தியா வருகையில் தாமதம் ஏற்பட்டிருப்பது, இந்திய அரசின் மீது உலக நிறுவனங்கள் வைத்துள்ள அவநம்பிக்கையை வெளிக்காட்டியுள்ளது.
இது குறித்து, காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ப. சிதம்பரம், “டெஸ்லா குழும நிறுவனர் எலன் மஸ்க், சீன பிரதமர் மீது வைத்திருக்கிற உறுதிப்பாடு கூட, இந்திய பிரதமர் மோடி மீது வைக்கவில்லை.
அதன் காரணமாகவே, எலன் மஸ்கின் இந்தியா வருகை தள்ளிப்போகியுள்ளது. பொது வெளியில் ஒன்றிய அரசு, வலிமையான அரசு என காட்டிக்கொள்ளும் மோடி, உள்ளுக்குள் புகைவதை மறைத்து வருகிறார்.
ஜெர்மனிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார மதிப்பானது ஏறக்குறைய ஒரேமாதிரி அளவாக உள்ளது. 2004-ல் இந்தியா GDP வளர்ச்சியில் 12-வது இடத்தில் இருந்தது. பின்னர் 2014-ல் ஏழாவது இடத்துக்கு முன்னேறியது. 2024-ல் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. எனவே யார் பிரதமரானாலும் இந்தியா 3-வது பொருளாதார நாடாவதை தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது” என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, சர்வாதிகாரத்தன்மையின் வெளிப்பாட்டால், இந்தியாவிற்கு வர இருக்கும் முதலீடுகளை தடுப்பதும், இருக்கின்ற உலக நிறுவனங்களை நாட்டை விட்டு வெளிநடப்பு செய்ய தூண்டுவதுமான வேலைகளை செய்யும் மோடியும், மோடி அரசும், நடப்பாண்டில் ஆட்சியிலிருந்து வெளியேறும் என்ற உறுதிபாட்டில் மக்கள் நிலைகொண்டிருப்பது, நடந்து வரும் மக்களவை தேர்தல் கணிப்புகளில் வெளிப்பட்டு வருகிறது.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!