India
சோதனையில் சிக்கிய ரூ. 2 கோடி : காரில் பணத்தை எடுத்து வந்த பா.ஜ.க பிரமுகரிடம் விசாரணை!
கர்நாடகா மாநிலத்தில் முதல்கட்டமாக ஏப்.26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்னும் நான்கு நாட்களே உள்ளதால் பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் வகையில் மாநில முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பெங்களூரு பின்னிபேட்டை சாலையில் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் இரண்டு பெரிய பைகளில் கட்டுக் கட்டாகப் பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து காரில் இருந்தவர்களிடம் இந்த பணம் குறித்து விசாரித்தபோது,வங்கியிலிருந்து பணத்தை எடுத்துச் செல்வதாகக் கூறினர். ரூ.2 கோடி இருந்ததால் உரிய ஆவணங்களைக் காட்டும்படி கூறி தேர்தல் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் காரில் இருந்த மூன்று பேரிடம் விசாரித்தபோது அதில் வெங்கடேஷ் பிரசாத் என்பவர் பா.ஜ.க கட்சியின் பிரமுகர் என்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ.2 கோடி பணம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!