India
சோதனையில் சிக்கிய ரூ. 2 கோடி : காரில் பணத்தை எடுத்து வந்த பா.ஜ.க பிரமுகரிடம் விசாரணை!
கர்நாடகா மாநிலத்தில் முதல்கட்டமாக ஏப்.26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்னும் நான்கு நாட்களே உள்ளதால் பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் வகையில் மாநில முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பெங்களூரு பின்னிபேட்டை சாலையில் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் இரண்டு பெரிய பைகளில் கட்டுக் கட்டாகப் பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து காரில் இருந்தவர்களிடம் இந்த பணம் குறித்து விசாரித்தபோது,வங்கியிலிருந்து பணத்தை எடுத்துச் செல்வதாகக் கூறினர். ரூ.2 கோடி இருந்ததால் உரிய ஆவணங்களைக் காட்டும்படி கூறி தேர்தல் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் காரில் இருந்த மூன்று பேரிடம் விசாரித்தபோது அதில் வெங்கடேஷ் பிரசாத் என்பவர் பா.ஜ.க கட்சியின் பிரமுகர் என்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ.2 கோடி பணம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!