India
சோதனையில் சிக்கிய ரூ. 2 கோடி : காரில் பணத்தை எடுத்து வந்த பா.ஜ.க பிரமுகரிடம் விசாரணை!
கர்நாடகா மாநிலத்தில் முதல்கட்டமாக ஏப்.26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்னும் நான்கு நாட்களே உள்ளதால் பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் வகையில் மாநில முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பெங்களூரு பின்னிபேட்டை சாலையில் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் இரண்டு பெரிய பைகளில் கட்டுக் கட்டாகப் பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து காரில் இருந்தவர்களிடம் இந்த பணம் குறித்து விசாரித்தபோது,வங்கியிலிருந்து பணத்தை எடுத்துச் செல்வதாகக் கூறினர். ரூ.2 கோடி இருந்ததால் உரிய ஆவணங்களைக் காட்டும்படி கூறி தேர்தல் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் காரில் இருந்த மூன்று பேரிடம் விசாரித்தபோது அதில் வெங்கடேஷ் பிரசாத் என்பவர் பா.ஜ.க கட்சியின் பிரமுகர் என்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ.2 கோடி பணம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Also Read
-
“இவர்களெல்லாமா அமைச்சர்கள்.. இனி அடுத்த தேர்தலில் விட மாட்டோம்..” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சூளுரை!
-
“இதையெல்லாம் செய்யணும்.. இல்லைனா பட்ஜெட் கூட்டத்தின்போது...” - தவெக அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை!
-
தூய்மை பணியாளரை இழிவு படுத்தும் தவெக... கண்டுகொள்ளாத காவல்துறை.. தொடரும் கொடுமைகள்!
-
மகளிர் டி20: யாருக்கு உலகக் கோப்பை.. ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா.. தட்டிப்பறிக்குமா இங்கிலாந்து!
-
சர்வதேச அளவில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் தொடக்கம்.. சச்சினை முந்திய வரலாற்று நிகழ்வு : முழு தகவல் அறிய!