India
”பொய்களை உதிர்ப்பதன் மூலம் வரலாறு மாறாது” : பா.ஜ.கவுக்கு ராகுல் காந்தி பதிலடி!
இந்தியாவில் மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்.19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் இந்த தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி என காங்கிரஸ் நிர்வாகி ராகுல் காந்தி எம்.பி தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ”2024 மக்களவை தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி.
ஒரு பக்கம் இந்தியாவை எப்போதும் ஒன்றிணைக்கும் சக்தியாக காங்கிரஸ் உள்ளது, மறுபுறம் மக்களை எப்போதும் பிரிக்க முயல்பவர்கள் உள்ளனர். நாட்டைப் பிளவுபடுத்த நினைத்த சக்திகளுடன் கைகோர்த்து அவர்களை வலுப்படுத்தியவர்கள், நாட்டின் ஒற்றுமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடியவர்கள் யார் என்பதற்கு வரலாறு சாட்சி.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது ஆங்கிலேயர்களுடன் நின்றது யார்? இந்தியாவின் சிறைகள் காங்கிரஸ் தலைவர்களால் நிரப்பப்பட்டபோது, நாட்டைப் பிளவுபடுத்திய சக்திகளுடன் மாநிலங்களில் ஆட்சியை நடத்துவது யார்?. அரசியல் தளங்களிலிருந்து பொய்களை உதிர்ப்பதன் மூலம் வரலாறு மாறாது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாடுக்கு திட்டங்களும் இல்லை! சிலிண்டரும் இல்லை! - தி.மு.க கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
-
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் 25 இலட்சம் பேருக்கு பட்டா! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!
-
“ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறக்கூடாது என்பது கொடூரமான சர்வாதிகார மனோபாவம்!” : முரசொலி தலையங்கம்!
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!