India
நகராட்சி கூட்டத்தில் சேர்களால் தாக்கிக்கொண்ட உறுப்பினர்கள்: உ.பி-யில் அதிர்ச்சி.. பின்னணியில் பாஜக MLA ?
உத்தரப்பிரதேச மாநிலம், சம்லி நகர் அமைந்துள்ளது. இன்று நேற்று நகராட்சி கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது 4 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகள் குறித்த விவாதம் நடைபெற்றுள்ளது.
இது குறித்து உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்த நிலையில், அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் தொடர்ந்து மற்ற தரப்பினரை விமர்சித்துள்ளனர்.
இதனால் இந்த விவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. அதில் சில கவுன்சிலர்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டனர். மேலும், சிலர் அங்கிருந்த டேபிள், சேர்களை எடுத்து ஒருவரை ஒருவர் தாக்க்கொண்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்த கூட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ பிரசன் செளத்ரி கலந்துகொண்ட நிலையில், அவர்களின் கோஷ்டிதான் இந்த மோதலை தொடங்கியதாக புகார் எழுந்துள்ளது. இந்த சண்டை குறித்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், அது வைரலானது.
இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், " மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளே நடக்காதபோது, இக்கூட்டத்தை ஏன் நடத்தவேண்டும்.. உள்ளாட்சி நிர்வாகத்தை நடத்த பா.ஜ.க பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.
Also Read
-
தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருக்க காரணம் இதுதான்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு - முழு விவரம்!
-
சுதந்திரப் போராட்ட வீரர் பொன்னப்ப நாடாருக்கு ரூ.50 லட்சத்தில் சிலை... திறந்து வைத்த முதலமைச்சர் !
-
புறநகர் ரயில் ரத்து - தென்னக ரயில்வேயின் அலட்சியம்.. கேட்காமலேயே அரசு பேருந்து சேவை: அமைச்சர் சிவசங்கர்!
-
புரசைவாக்கம் முதல் மூலகொத்தளம் வரை.. இடைவிடாது அடுத்தடுத்து மக்கள் திட்டங்கள்.. துணை முதலமைச்சர் அசத்தல்!
-
மொத்தம் ரூ.16 கோடியில்.. உள்விளையாட்டரங்கம் முதல் திருமண மண்டபம் வரை.. திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்!