India
நகராட்சி கூட்டத்தில் சேர்களால் தாக்கிக்கொண்ட உறுப்பினர்கள்: உ.பி-யில் அதிர்ச்சி.. பின்னணியில் பாஜக MLA ?
உத்தரப்பிரதேச மாநிலம், சம்லி நகர் அமைந்துள்ளது. இன்று நேற்று நகராட்சி கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது 4 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகள் குறித்த விவாதம் நடைபெற்றுள்ளது.
இது குறித்து உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்த நிலையில், அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் தொடர்ந்து மற்ற தரப்பினரை விமர்சித்துள்ளனர்.
இதனால் இந்த விவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. அதில் சில கவுன்சிலர்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டனர். மேலும், சிலர் அங்கிருந்த டேபிள், சேர்களை எடுத்து ஒருவரை ஒருவர் தாக்க்கொண்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்த கூட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ பிரசன் செளத்ரி கலந்துகொண்ட நிலையில், அவர்களின் கோஷ்டிதான் இந்த மோதலை தொடங்கியதாக புகார் எழுந்துள்ளது. இந்த சண்டை குறித்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், அது வைரலானது.
இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், " மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளே நடக்காதபோது, இக்கூட்டத்தை ஏன் நடத்தவேண்டும்.. உள்ளாட்சி நிர்வாகத்தை நடத்த பா.ஜ.க பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!