India
ஒன்றரை வருடமாக செயல்பட்டு வந்த போலி சுங்கச்சாவடி : பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலத்தில் நடந்த நூதன மோசடி!
இந்தியாவில் வாகனங்களுக்கான சுங்கச்சாவடி கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்க கட்டனத்தை குறைக்க வேண்டும் மற்றும் சுங்கச்சாவடிகளையும் குறைக்க வேண்டும் என பொதுமக்கள் உட்பட மாநில அரசுகள் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் குஜராத்தில் ஒன்றரை வருடமாக போலி சுங்கச்சாவடி ஒன்று செயல்பட்டு வந்துள்ளது அம்பலமாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்று இந்த மோசடி வேலையில் ஈடுபட்டு வந்துள்ளது.
குஜராத் மாநிலம் பாமன்போர் - கட்ச் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனம் ஒன்று தங்களுக்குச் சொந்தமான இடத்தில் சுங்கச்சாவடி அமைத்துள்ளது. இதற்காக நெடுஞ்சாலையில் பாதைகளை மாற்றி தாங்கள் அமைத்த சுங்கச்சாவடி வரை சாலை அமைத்துள்ளனர். மேலும் குறைந்த கட்டணத்தை வசூலித்து வந்துள்ளனர்.
இதனால் பலரும் இந்த சுங்கச்சாவடியைப் பயன்படுத்தி வந்துள்ளனர். இப்படி ஒரு சுங்கச்சாவடி செயல்படுவது குறித்து போலிஸார் உட்பட எந்த அதிகாரிகளுக்கும் தெரியவில்லை. இந்நிலையில்தான் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் திருப்பி மாற்று வாதையில் விடப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்குப் புகார் வந்துள்ளது.
இந்த புகாரை அடுத்து ஆய்வு செய்தபோதுதான் கடந்த ஒன்றரை வருடங்கலாக போலியாக சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்துள்ளது. இதையடுத்து போலியாக சுங்கச்சாவடி நடத்தி வந்த அமிர்ஷி படேல், வனராஜ் சிங் ஜாலா, ஹர்விஜய் சிங் ஜாலா, தர்மேந்திர சிங் ஜாலா, யுவராஜ் சிங் ஜாலா உள்ளிட்ட 5 பேர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - காரணம் என்ன ?
-
தமிழ்நாட்டுக்கு பாராமுகம் காட்டினால்,தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- தினகரன் தலையங்கம் எச்சரிக்கை!
-
முதலில் எய்ம்ஸ் அல்வா, இப்போது மெட்ரோ அல்வா: இது பாஜக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதி- முரசொலி விமர்சனம்!
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!