India
8 வயது சிறுமி வன்கொடுமை செய்யபட்டு கொலை.. 15 வயது சிறுவன் கைது- சடலத்தை மறைக்க உதவிய சிறுவனின் பெற்றோர்!
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகேயுள்ள வசா என்ற பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவரின் வீட்டின் அருகே 15 வயது சிறுவன் ஒருவர் இருந்துள்ளார். 3 நாட்களுக்கு முன்னர் சிறுமி தனியாக இருந்தபோது அவரை அந்த சிறுவன் தனது வீட்டுக்குள் இழுத்து சென்றுள்ளார்.
பின்னர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது அந்த சிறுமி கத்தியால் கழுத்தை நெரித்து அந்த சிறுமியை கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்த சாக்கு மூட்டையில் சிறுமியின் உடலை கட்டிவைத்து வழக்கம் போல இருந்துள்ளார்.
இதனிடையே சிறுமியை காணாமல் அவரது பெற்றோர் தேடியுள்ளனர். மேலும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணையில் மூன்று நாட்களுக்கு பிறகு 15 வயது சிறுவன் வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்துள்ளது.
அப்போது போலிஸார் வீட்டுக்குள் தேடியபோது அங்கிருந்த சடலத்தில் சிறுமியின் உடல் கிடந்துள்ளது. தொடர்ந்து அந்த வீட்டில் இருந்தவரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியபோது, அந்த நபரின் 15 வயது மகன் இந்த கொலையை செய்ததும், பின்னர் அதனை அறிந்து தந்தையே அந்த சடலத்தை மறைத்து வைத்ததும் தெரியவந்தது.
பின்னர், உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்திருந்த சிறுவனையும் போலிஸார் கைது செய்தனர். மேலும், சிறுமியின் சடலத்தை மறைக்க உதவிய சிறுவனின் தாயையும் போலிஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?