India
8 வயது சிறுமி வன்கொடுமை செய்யபட்டு கொலை.. 15 வயது சிறுவன் கைது- சடலத்தை மறைக்க உதவிய சிறுவனின் பெற்றோர்!
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகேயுள்ள வசா என்ற பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவரின் வீட்டின் அருகே 15 வயது சிறுவன் ஒருவர் இருந்துள்ளார். 3 நாட்களுக்கு முன்னர் சிறுமி தனியாக இருந்தபோது அவரை அந்த சிறுவன் தனது வீட்டுக்குள் இழுத்து சென்றுள்ளார்.
பின்னர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது அந்த சிறுமி கத்தியால் கழுத்தை நெரித்து அந்த சிறுமியை கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்த சாக்கு மூட்டையில் சிறுமியின் உடலை கட்டிவைத்து வழக்கம் போல இருந்துள்ளார்.
இதனிடையே சிறுமியை காணாமல் அவரது பெற்றோர் தேடியுள்ளனர். மேலும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணையில் மூன்று நாட்களுக்கு பிறகு 15 வயது சிறுவன் வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்துள்ளது.
அப்போது போலிஸார் வீட்டுக்குள் தேடியபோது அங்கிருந்த சடலத்தில் சிறுமியின் உடல் கிடந்துள்ளது. தொடர்ந்து அந்த வீட்டில் இருந்தவரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியபோது, அந்த நபரின் 15 வயது மகன் இந்த கொலையை செய்ததும், பின்னர் அதனை அறிந்து தந்தையே அந்த சடலத்தை மறைத்து வைத்ததும் தெரியவந்தது.
பின்னர், உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்திருந்த சிறுவனையும் போலிஸார் கைது செய்தனர். மேலும், சிறுமியின் சடலத்தை மறைக்க உதவிய சிறுவனின் தாயையும் போலிஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
-
“6 மாதம் பொறுத்திருந்தால், பறிபோன உயிர்களைத் திருப்பித்தருவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?” : தி.மு.க கேள்வி!
-
மறைமுகமாக போதைப் பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கிறாரா விஜய்? : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“கொடூரமான குற்றங்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது” : பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!