India
8 வயது சிறுமி வன்கொடுமை செய்யபட்டு கொலை.. 15 வயது சிறுவன் கைது- சடலத்தை மறைக்க உதவிய சிறுவனின் பெற்றோர்!
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகேயுள்ள வசா என்ற பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவரின் வீட்டின் அருகே 15 வயது சிறுவன் ஒருவர் இருந்துள்ளார். 3 நாட்களுக்கு முன்னர் சிறுமி தனியாக இருந்தபோது அவரை அந்த சிறுவன் தனது வீட்டுக்குள் இழுத்து சென்றுள்ளார்.
பின்னர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது அந்த சிறுமி கத்தியால் கழுத்தை நெரித்து அந்த சிறுமியை கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்த சாக்கு மூட்டையில் சிறுமியின் உடலை கட்டிவைத்து வழக்கம் போல இருந்துள்ளார்.
இதனிடையே சிறுமியை காணாமல் அவரது பெற்றோர் தேடியுள்ளனர். மேலும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணையில் மூன்று நாட்களுக்கு பிறகு 15 வயது சிறுவன் வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்துள்ளது.
அப்போது போலிஸார் வீட்டுக்குள் தேடியபோது அங்கிருந்த சடலத்தில் சிறுமியின் உடல் கிடந்துள்ளது. தொடர்ந்து அந்த வீட்டில் இருந்தவரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியபோது, அந்த நபரின் 15 வயது மகன் இந்த கொலையை செய்ததும், பின்னர் அதனை அறிந்து தந்தையே அந்த சடலத்தை மறைத்து வைத்ததும் தெரியவந்தது.
பின்னர், உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்திருந்த சிறுவனையும் போலிஸார் கைது செய்தனர். மேலும், சிறுமியின் சடலத்தை மறைக்க உதவிய சிறுவனின் தாயையும் போலிஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் : தலையிட்டு தீர்வு காணவேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
“பாசிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற இளைஞர் அணி எப்போதும் தயார்” : துணை முதலமைச்சர் உதயநிதி !
-
கன்னியாகுமரி to சென்னை.. 6 நாட்கள் மகளிர் விடியல் பேருந்துகளில் பயணம்... பிரமிக்க வைத்த 2 பெண்கள்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஜீரோ சொன்ன பாஜகவுக்கு தேர்தலில் ஜீரோதான் கிடைக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
6வது முறையாக U19 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! ஒரே தொடரில் சாதனை மேல் சாதனை! - முழுவிவரம் உள்ளே