India
”கேரளத்தில் நிதி நெருக்கடியை உள்ளாக்கும் ஒன்றிய அரசு” : முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு!
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் கேரள மாநிலத்திற்கு வருகை தந்தார். அப்போது, அவர்," கேரள மாநிலத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியை முறையாக பயன்படுத்தாததால் இம்மாநிலம் நிதி நெருக்கடியைச் சந்திக்கிறது என கூறியுள்ளார்.
இதையடுத்து ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இக்கருத்திற்குக் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கேரள மாநிலத்திற்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக ஒன்றிய நிதியமைச்சர் பொய்யான தகவலைக் கூறுகிறார்.
மாநிலத்தின் கடன் வாங்கும் அளவை ஒன்றிய அரசு குறைத்ததோடு, ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்குவதையும் பா.ஜ.க அரசு நிறுத்திக் கொண்டது. இப்படி இருக்க மாநில அரசு மீது வேண்டும் என்றே பழிசுமத்த பார்க்கிறார்.
கேரள மாநிலத்தை நிதி நெருக்கடிக்கு உள்ளாக்கும் பணியை ஒன்றிய அரசு செய்கிறது. இதற்கு எதிராக மக்கள் குரல் எழுப்பினால் போலி செய்தியைப் பரப்பி மாநிலத்தின் தேவையை பா.ஜ.க அரசு மறைக்கிறது. 2017-18 நிதியாண்டு முதல் ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டிய நிதிகளில் பலநூறு கோடிகள் இன்னும் நிலுவையில் உள்ளன" என பதிலடி கொடுத்துள்ளார்.
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!