India
ஊதியம் கேட்ட ஊழியர் - தான் அணிந்த செருப்பை வாயால் எடுக்க சொன்ன முதலாளி : குஜராத்தில் கொடூரம்!
குஜராத் மாநிலம் மோர்பியில் டைல்ஸ் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்குப் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நிலேஷ் தல்சானியா என்ற இளைஞர் அக்டோபர் 2 ஆம் தேதி வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
பின்னர் திடீரென அக்டோபர் 18 ஆம் தேதி எவ்வித காரணமும் சொல்லாமல் அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இருப்பினும் தான் வேலை செய்த 16 நாட்களுக்கு ஊதியம் கொடுப்பார்கள் என இளைஞர் நினைத்துள்ளார்.
இது குறித்து நிறுவனத்தின் தொலைப்பேசி எண்ணிற்கு அழைத்து தனது ஊதியம் குறித்துக் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் உரிய பதில் கொடுக்கவில்லை. இதனால் நிறுவனத்திற்குச் சென்று கேட்டுள்ளார். அப்போது நிறுவனத்தின் உரிமையாளர் விபூதி படேல் ராணிபால் என்பவர் ஊதியம் தரமுடியாது என நிலேஷ் தல்சானியாவை மிரட்டியுள்ளார்.
மேலும் அவரை நிறுவனத்தின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று அடித்து, தான் அணிந்திருந்த செருப்பை வாயால் எடுக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். அதோடு நிறுவனத்தில் பணம் திருடிவிட்டதாகச் சொல்லி காவல்நிலையத்தில் புகார் கொடுத்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். நிலேஷ் தல்சானியா உடன் வந்த சகோதரர்களையும் அடித்துள்ளனர்.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட நிலேஷ் தல்சானியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலிஸார் நிறுவனத்தின் உரிமையாளர் விபூதி படேல் ராணிபால் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. இந்த கொடூர சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!