India
”பெண் பத்திரிகையாளரிடம் அத்துமீறல்”: மன்னிப்பு கேட்ட பிரபல நடிகரும் பாஜக நிர்வாகியுமான சுரேஷ் கோபி!
மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துப் பிரபலமானவர் சுரேஷ் கோபி. பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், கோழிக்கோட்டில் சுரேஷ் கோபி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பெண் ஊடகவியாளர் ஒருவர் அவரிடம் கேள்வி கேட்டுள்ளார். அப்போது அவர், பதில் அளித்துக் கொண்டே அந்த பெண்ணின் தோளில் கைவைத்துள்ளார்.
உடனே அப்பெண் தடுத்து விடுகிறார். இருப்பினும் மீண்டும் சுரேஷ் கோபி பெண் ஊடகவியலாளர் தோளில் கைவைக்க முயன்றுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி கடும் கண்டனங்கள் எழுந்தது. இதையடுத்து சுரேஷ்போபி தனது முகநூல் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.
அதில், "பொது இடங்களிலோ அல்லது வாழ்க்கையிலோ நான் ஒருபோதும் தகாத முறையில் நடந்து கொண்டதில்லை. இந்த சம்பவத்தில் அந்த பெண் பத்திரிகையாளரின் உணர்வுகளை மதிக்கிறேன். எனது நடவடிக்கை அவரை புண்படுத்துவதாக இருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!
-
நீட் மோசடி.. NTA அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு ? - உச்ச நீதிமன்றத்தில் பகீர் கிளப்பு புதிய மனு!
-
ஓசூர் விமான ஆய்வு மையம் ஆந்திராவுக்கு மாற்றம் : இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது - டி.ஆர்.பி.ராஜா!
-
வீட்டு பால்கனியில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளர்: இதை வளர்ப்பதால் என்ன தப்பு?- போலீசாரிடம் வாக்குவாதம்