India
கட்சி அலுவலகத்தை சூறையாடிய பாஜக தொண்டர்கள்: ராஜஸ்தான் தேர்தலில் பாஜகவில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டம்!
ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் 25-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் நிலையில், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது. இதனால் பா.ஜ.க அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
இதையடுத்து, தற்போது எம்.பிகளாக இருக்கும் சிலரை பா.ஜ.க இந்த தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இது கட்சிக்குள் உட்கட்சி மோதலை உருவாக்கியுள்ளது. அதேபோல் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவின் ஆதரவாளர்களின் பெயர்கள் இடம் பெறாததால் அவர்களும் போர்கொடி தூக்கியுள்ளனர்.
ஜோத்வாரா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க எம்பி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத முன்னாள் அமைச்சர் ராஜ்பால் சிங்கின் ஆதரவாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் அவருக்குக் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், கட்சி தலைமைக்கு எதிராக பல்வேறு இடங்களில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, சித்தோர்கரில் உள்ள மாநிலத் தலைவர் சிபி ஜோஷியின் வீடு மீது கற்களை வீசி பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதேபோல் ராஜ்சமந்தில் உள்ள கட்சி அலுவலகத்தைச் சூறையாடிய பாஜகவினர், அங்குள்ள பொருட்களை தீ வைத்துக் கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கட்சி அலுவலகத்தைச் சேதப்படுத்தியது தொடர்பாக 4 பேரை பாஜக தலைமை சஸ்பெண்ட் செய்துள்ளது.
Also Read
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
-
“6 மாதம் பொறுத்திருந்தால், பறிபோன உயிர்களைத் திருப்பித்தருவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?” : தி.மு.க கேள்வி!
-
மறைமுகமாக போதைப் பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கிறாரா விஜய்? : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“கொடூரமான குற்றங்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது” : பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!