India
49 வயதில் பிரபல டீ நிறுவனத்தின் உரிமையாளர் மரணம் : தெருநாய்கள் துரத்தியதால் ஏற்பட்ட துயரம்!
பிரபல வாஹா பக்ரி டீ தூள் நிறுவனத்தின் உரிமையாளர் பரக் தேசாய். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் இவர். இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள தனது வீட்டு அருகே கடந்த 15ம் தேதி நடைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் பரக் தேசாய். அப்போது தெருநாய்கள் அவரை துரத்தியுள்ளது. இதனால் அவர் நாய்களிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடியுள்ளார்.
அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து பரக் தேசாய் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் முதல் அவரின் டீ தூள் ரசிகர்கள் வரை அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தெருநாய்கள் துரத்தியதில் கீழே விழுந்து பிரபல டீ தூள் நிறுவனத்தின் உரிமையாளர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"பாஜக அலுவலகத்தை முற்றுகைட்டு போராட்டம்" - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு !
-
நாட்டுக்கு கேடு பயக்கும் மோடியின் பிரசாரம்: இந்து நாளேடு தலையங்கம்!
-
“இது பிரதமர் பதவிக்கான தகுதியா?” - இந்தியா கூட்டணி குறித்து மோடியின் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
"பிரதமர் பதவிக்கு தான் தகுதியற்றவர் என்பதை மோடி உணர்ந்துள்ளார்" - பிரியங்கா காந்தி விமர்சனம் !
-
ஆட்சிக்கு வந்ததும் ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக 10 கிலோ தானியங்கள் வழங்கப்படும்- ராகுல் காந்தி வாக்குறுதி