India
49 வயதில் பிரபல டீ நிறுவனத்தின் உரிமையாளர் மரணம் : தெருநாய்கள் துரத்தியதால் ஏற்பட்ட துயரம்!
பிரபல வாஹா பக்ரி டீ தூள் நிறுவனத்தின் உரிமையாளர் பரக் தேசாய். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் இவர். இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள தனது வீட்டு அருகே கடந்த 15ம் தேதி நடைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் பரக் தேசாய். அப்போது தெருநாய்கள் அவரை துரத்தியுள்ளது. இதனால் அவர் நாய்களிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடியுள்ளார்.
அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து பரக் தேசாய் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் முதல் அவரின் டீ தூள் ரசிகர்கள் வரை அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தெருநாய்கள் துரத்தியதில் கீழே விழுந்து பிரபல டீ தூள் நிறுவனத்தின் உரிமையாளர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!
-
பெரியார் மண்ணில் அ.தி.மு.க இப்படி பா.ஜ.க-வுடன் கைகோர்த்து நிற்கலாமா? : பழனிசாமிக்கு டி.ராஜா கேள்வி!
-
#Delimitation இந்தியாவின் தென் முனையில் இருந்து உரிமைக் குரல் எழுப்புவோம் : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
செய்தியாளர் மீது தாக்குதல் : ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளரின் செயலால் பரபரப்பு!
-
தொகுதி மறுவரையறை : தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி எச்சரிக்கை!