India
குஜராத் : பாரம்பரிய நடனத்தின்போது மாரடைப்பு: அடுத்தடுத்து 10 பேர் பலி- நவராத்திரி கொண்டாட்டத்தில் சோகம் !
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான நவராத்திரி தற்போது அங்கு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மொத்தம் 9 நாட்கள் நடைபெறும் இந்த கொண்டாட்டத்தில் இரவில் தினந்தோறும் 'கர்பா' நடனம் ஆடி இந்த பண்டிகை கொண்டாடப்படும்.
பாரம்பரிய நடனமாக இந்த 'கர்பா' நடனம் இரவு முழுவதும் ஆடப்படும். இந்த நடனத்தின் போது பாரம்பரிய உடை அணிந்த ஆண்கள், பெண்கள் இசைக்கு ஏற்க நடனமாடுவர். வடமாநிலத்தின் பல்வேறு பகுதியில் இந்த நடனம் ஆடப்பட்டாலும் குஜராத்தில் பல ஆண்டுகளான இந்த நடனம் புகழ் பெற்று விளங்குகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் குஜராத்தில் நவராத்திரி நிகழ்வு நடைபெற்று வரும் நிலையில், அங்கு 'கர்பா' நடனமாடிய 10-க்கும் அதிகமானோர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பல்வேறு பகுதிகளில் இந்த மரணம் நடைபெற்றுள்ளது.
இதில் இறந்தவர்கள் பலர் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. நவராத்திரி தொடங்கிய முதல் 6 நாட்களில் கர்பா நடனமாடியபோது 609 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக 'கர்பா' நடனங்கள் நடைபெறும் இடங்களில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆம்புலன்ஸ்களை நிறுத்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், மருத்துவ உபகரணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!