India
”அவனை தூக்கிலிடுங்கள்”.. உஜ்ஜைன் கொடூர சம்பவத்தின் குற்றவாளி கைது : தந்தை பேட்டி!
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில் 12 வயது சிறுமி ரத்தக்கறையுடன் ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி உதவி கேட்கும் வீடியோ அண்மையில் சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து போலிஸார் விசாரணை செய்தபோது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த கொடூர சம்பவத்திற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அம்மாநில பா.ஜ.க அரசைக் கடுமையாகக் குற்றம்சாட்டினர். நாட்டையே இக்கொடூர சம்பவம் உலுக்கியதை அடுத்து போலிஸார் குற்றவாளியைப் பிடிக்கத் தீவிரமாகச் செயல்பட்டு வந்தனர்.
பின்னர் 700க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகு, இதற்கு காரணமாக இருந்த ஆட்டோ ஓட்டுநர் பாரத் சோனி என்பவரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட தனது மகனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என குற்றவாளியின் தந்தை பேட்டிக்கொடுத்துள்ளார்.
இது குறித்துக் கூறிய அவர் இது, "வெட்கக்கேடான செயல். என் மகனைச் சந்திக்க நான் மருத்துவமனைக்குச் செல்லவில்லை. காவல் நிலையம் அல்லது நீதிமன்றத்திற்கும் செல்ல மாட்டேன். என் மகன் ஒரு கொடூர குற்றத்தைச் செய்து விட்டான். அவனைத் தூக்கிலிட வேண்டும்." என தெரிவித்துள்ளார்.
Also Read
-
கொளத்தூர் கபாலீசுவரர் கல்லூரி : ரூ.31.45 கோடி செலவில் புதிய கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் !
-
“ED, IT, CBI-யை ஒரு கை பார்க்க நாங்களும் தயாராகதான் இருக்கிறோம்!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்” : கலைஞர் பாணியில் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாணவி தற்கொலை வழக்கு : அம்பலமான பா.ஜ.க.வின் கலவர அரசியல் - முரசொலி!
-
பொள்ளாச்சியில் ரூ.9.83 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!