India
கையை பிளேடால் அறுத்துக் கொண்ட 14 மாணவிகள்.. விசாரணையில் கர்நாடகா போலிஸ் ஷாக்!
கர்நாடகா மாநிலம் பெங்களூரு அடுத்த தண்டேலியா பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவிகள் சிலர் கையில் வெட்டுக் காயத்துடன் வீட்டிற்குச் சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர்கள் விசாரித்தபோது ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களை கூறியுள்ளனர்.
மேலும் ஒரே நேரத்தில் 14 மாணவிகள் பள்ளியில் கையை பிளேடால் அறுத்துக் கொண்டது தெரியவந்தது. இதுபற்றி அறிந்த போலிஸார் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை செய்துள்ளனர். இதில் தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் மாணவிகள் வெவ்வேறு காரணங்களைக் கூறுகின்றனர். இதனால் சரியாக என்ன நடந்தது என்று தெரியவில்லை கூறியுள்ளனர்.
பின்னர் போலிஸார் மாணவிகளிடம் விசாரித்துள்ளனர். அப்போது விளையாடும் போது ஏற்பட்ட டாஸ்க் அடிப்படையில் கையை அறுத்துக் கொண்டது தெரியவந்ததுள்ளது. இருப்பினும் மாணவிகள் எந்த மாதிரியான விளையாட்டை விளையாடினார்கள் அல்லது இதற்குப் பின் வேறு காரணங்கள் இருக்கிறதா? என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை குற்றங்கள்! : இம்மி அளவும் வாய் திறக்காத முதலமைச்சர் விஜய்!
-
“காவிரி நீரை மறந்துவிட வேண்டியது தான்!” : த.வெ.க ஆட்சிக்கு முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“ஏழை மாணவர்களின் பசி போக்கிய காலை உணவுத் திட்டம்.. திராவிட நாயகர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வை”
-
இது பற்றி பேசக்கூடாது என்றால் என்ன நியாயம்? : த.வெ.க அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி!
-
“த.வெ.க ஆட்சியில் தொடர் கதையாகும் பாலியல் தொல்லைகள்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்!