India
கையை பிளேடால் அறுத்துக் கொண்ட 14 மாணவிகள்.. விசாரணையில் கர்நாடகா போலிஸ் ஷாக்!
கர்நாடகா மாநிலம் பெங்களூரு அடுத்த தண்டேலியா பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவிகள் சிலர் கையில் வெட்டுக் காயத்துடன் வீட்டிற்குச் சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர்கள் விசாரித்தபோது ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களை கூறியுள்ளனர்.
மேலும் ஒரே நேரத்தில் 14 மாணவிகள் பள்ளியில் கையை பிளேடால் அறுத்துக் கொண்டது தெரியவந்தது. இதுபற்றி அறிந்த போலிஸார் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை செய்துள்ளனர். இதில் தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் மாணவிகள் வெவ்வேறு காரணங்களைக் கூறுகின்றனர். இதனால் சரியாக என்ன நடந்தது என்று தெரியவில்லை கூறியுள்ளனர்.
பின்னர் போலிஸார் மாணவிகளிடம் விசாரித்துள்ளனர். அப்போது விளையாடும் போது ஏற்பட்ட டாஸ்க் அடிப்படையில் கையை அறுத்துக் கொண்டது தெரியவந்ததுள்ளது. இருப்பினும் மாணவிகள் எந்த மாதிரியான விளையாட்டை விளையாடினார்கள் அல்லது இதற்குப் பின் வேறு காரணங்கள் இருக்கிறதா? என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !