India
கையை பிளேடால் அறுத்துக் கொண்ட 14 மாணவிகள்.. விசாரணையில் கர்நாடகா போலிஸ் ஷாக்!
கர்நாடகா மாநிலம் பெங்களூரு அடுத்த தண்டேலியா பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவிகள் சிலர் கையில் வெட்டுக் காயத்துடன் வீட்டிற்குச் சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர்கள் விசாரித்தபோது ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களை கூறியுள்ளனர்.
மேலும் ஒரே நேரத்தில் 14 மாணவிகள் பள்ளியில் கையை பிளேடால் அறுத்துக் கொண்டது தெரியவந்தது. இதுபற்றி அறிந்த போலிஸார் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை செய்துள்ளனர். இதில் தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் மாணவிகள் வெவ்வேறு காரணங்களைக் கூறுகின்றனர். இதனால் சரியாக என்ன நடந்தது என்று தெரியவில்லை கூறியுள்ளனர்.
பின்னர் போலிஸார் மாணவிகளிடம் விசாரித்துள்ளனர். அப்போது விளையாடும் போது ஏற்பட்ட டாஸ்க் அடிப்படையில் கையை அறுத்துக் கொண்டது தெரியவந்ததுள்ளது. இருப்பினும் மாணவிகள் எந்த மாதிரியான விளையாட்டை விளையாடினார்கள் அல்லது இதற்குப் பின் வேறு காரணங்கள் இருக்கிறதா? என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!