India
மனைவியை கொன்று 36 மணிநேரம் பாத்ரூமில் ஒளிந்துகிடந்த கணவர்.. வெளிவந்த கொலைக்கான அதிர்ச்சி பின்னணி !
உத்தரப்பிரதேசமாநிலமத்தை சேர்ந்தவர் நிதின் சின்ஹா. இவருக்கும் வழக்கறிஞரான ரேணு சின்ஹா (61) என்பவருக்கும் பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. சமீப காலமாக ரேணு சின்ஹாவுக்கு சொந்தமான சொத்து ஒன்றை விற்பதில் இருவருக்கும் இடையே சில நாட்களாக தகராறு நிலவி வந்துள்ளது.
இந்த நிலையில், ரேணு சின்ஹாவின் சகோதரர் காவல்துறைக்கு போன் செய்து ரேணு சின்ஹாவை இரண்டு நாட்களான தொடர்பு கொள்ளமுடியவில்லை என்று கூறியுள்ளார். இந்த தகவல் கிடைத்ததும், உடனடியாக ரேணு சின்ஹாவின் வீட்டுக்கு போலிஸார் சென்றுள்ளனர்.
அங்கு சென்று பார்த்ததும் வீட்டின் குளியலறையில் ரேணு சின்ஹா உயிரிழந்து கிடப்பதை கண்டு போலிஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ரேணு சின்ஹாவின் கணவர் காணாமல் போனதால் அவர் மீது பொலிசாரின் சந்தேகம் திரும்பியுள்ளது.
உடனடியாக அவரின் மொபைல் போனை வைத்து அவர் இருக்கும் இடத்தை போலிஸார் தெரிந்துகொள்ள முயன்றபோது அது அவர் தனது வீட்டின் பின்புறம் இருப்பதாக காட்டியது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலிஸார் அங்கு தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு இருந்த பாத்ரூமில் அவர் ஒளிந்துகொண்டிருப்பதை போலிஸார் கண்டு பிடித்தனர்.
தொடர்ந்து அவரை கைது செய்த போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் மனைவியை கொலைசெய்துவிட்டு சுமார் 36 மணி நேரமாக பாத்ரூமில் ஒளிந்துகொண்டிருந்தாக கூறியுள்ளார். மேலும், ரேணு சின்ஹாவின் சொத்தை விற்க அவர் ஒப்புக்கொள்ளாததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கொலை செய்ததாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!