India
10 ரூபாய் கொடுத்து சிறுமி மிரட்டி பாலியல் வன்கொடுமை.. சிக்கிய 68-வயது முதியவர்.. நடந்தது என்ன ?
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள கோரிபாரி என்னும் இடத்தில 5-ம் வகுப்பு படிக்கும் சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவரின் வீட்டுக்கு அருகில் 68-வயது முதியவர் ஒருவர் வசித்து வந்துள்ளார். பக்கத்து வீடு என்பதால் முதியவர் சிறுமியிடம் அடிக்கடி பேசி வந்திலர்.
இந்த சூழலில் சில மாதங்களுக்கு முன்னர் அந்த முதியவர் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தை வெளியில் யாரிடமாவது சொன்னால் கழுத்தை நெறித்து கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதன் காரணமாக அந்த சிறுமி இதை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். ஆனால், இதனை சாதகமாக பயன்படுத்திய அந்த முதியவர் அந்த சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு ஒவ்வொரு முறை பாலியல் வன்கொடுமை செய்யும்போதும் அந்த சிறுமிக்கு 10 ரூபாய் கொடுப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
ஆனால், ஒருகட்டத்தில் அந்த சிறுமி இந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலிஸார் அந்த முதியவரை கைது செய்தனர்.
இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமி, மருத்துவ பரிசோதனைக்காக வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,62,864 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!
-
“நீங்கள் மற்றவர்களுக்கு Inspire ஆக இருக்க வேண்டும்”: மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000! : நாளை (ஜன.8) தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“Very sorry உங்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!