India
ஆடு திருடியதாக சந்தேகம்.. பட்டியலின இளைஞரை தலைகீழாக தொங்கவிட்டு சித்திரவதை : தெலங்கனாவில் கொடூரம்!
தெலங்கானா மாநிலம் மஞ்சேரி மாவட்டத்திற்குட்பட்ட யாபால் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.ராமுலு. இவர் ஆட்டுப்பன்னை வைத்துள்ளார். இவரது ஆட்டுப்பனையிலிருந்து ஆடுகள் திருடப்பட்டுள்ளது. இதையடுத்து ஆட்டுப் பண்ணையில் வேலைபார்த்து வரும் நரேஷ் என்பவர் அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பட்டியலினத்தை சேர்ந்த கிரண் அவரது நண்பர் தேஜா ஆகியோர் தான் ஆடுகளை திருடி இருப்பார்கள் என சந்தேகத்தின் பேரில் கூறியுள்ளார்.
இதனால் ஆட்டுப்பனை உரிமையாளர் ராமுலு, அவரது மனைவி ஸ்வரூபா, மகன் ஸ்ரீனிவாஸ் மூன்று பேரும் சேர்ந்து கொண்டு கிரண், தேஜா ஆகிய இருவரையும் பிடித்து பன்னையில் தலைகீழா கட்டி தொங்கவிட்டு அடித்துள்ளனர். மேலும் தரையில் புகைப்போட்டு சித்தரவதை செய்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவத்தை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் கிரணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து ராமுலு, ஸ்வரூபா, ஸ்ரீநிவாஸ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆடு திருடியதாக இரண்டு பட்டியலின இளைஞர்களை தலைகீழாக தொங்கவிட்டு சித்திரவதை செய்த சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!
-
பீரோவைத் திறந்தபோது... துணிகளுக்கு இடையே 3 அடி நாகப்பாம்பு!