India
ஆடு திருடியதாக சந்தேகம்.. பட்டியலின இளைஞரை தலைகீழாக தொங்கவிட்டு சித்திரவதை : தெலங்கனாவில் கொடூரம்!
தெலங்கானா மாநிலம் மஞ்சேரி மாவட்டத்திற்குட்பட்ட யாபால் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.ராமுலு. இவர் ஆட்டுப்பன்னை வைத்துள்ளார். இவரது ஆட்டுப்பனையிலிருந்து ஆடுகள் திருடப்பட்டுள்ளது. இதையடுத்து ஆட்டுப் பண்ணையில் வேலைபார்த்து வரும் நரேஷ் என்பவர் அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பட்டியலினத்தை சேர்ந்த கிரண் அவரது நண்பர் தேஜா ஆகியோர் தான் ஆடுகளை திருடி இருப்பார்கள் என சந்தேகத்தின் பேரில் கூறியுள்ளார்.
இதனால் ஆட்டுப்பனை உரிமையாளர் ராமுலு, அவரது மனைவி ஸ்வரூபா, மகன் ஸ்ரீனிவாஸ் மூன்று பேரும் சேர்ந்து கொண்டு கிரண், தேஜா ஆகிய இருவரையும் பிடித்து பன்னையில் தலைகீழா கட்டி தொங்கவிட்டு அடித்துள்ளனர். மேலும் தரையில் புகைப்போட்டு சித்தரவதை செய்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவத்தை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் கிரணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து ராமுலு, ஸ்வரூபா, ஸ்ரீநிவாஸ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆடு திருடியதாக இரண்டு பட்டியலின இளைஞர்களை தலைகீழாக தொங்கவிட்டு சித்திரவதை செய்த சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!