India
ஆடு திருடியதாக சந்தேகம்.. பட்டியலின இளைஞரை தலைகீழாக தொங்கவிட்டு சித்திரவதை : தெலங்கனாவில் கொடூரம்!
தெலங்கானா மாநிலம் மஞ்சேரி மாவட்டத்திற்குட்பட்ட யாபால் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.ராமுலு. இவர் ஆட்டுப்பன்னை வைத்துள்ளார். இவரது ஆட்டுப்பனையிலிருந்து ஆடுகள் திருடப்பட்டுள்ளது. இதையடுத்து ஆட்டுப் பண்ணையில் வேலைபார்த்து வரும் நரேஷ் என்பவர் அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பட்டியலினத்தை சேர்ந்த கிரண் அவரது நண்பர் தேஜா ஆகியோர் தான் ஆடுகளை திருடி இருப்பார்கள் என சந்தேகத்தின் பேரில் கூறியுள்ளார்.
இதனால் ஆட்டுப்பனை உரிமையாளர் ராமுலு, அவரது மனைவி ஸ்வரூபா, மகன் ஸ்ரீனிவாஸ் மூன்று பேரும் சேர்ந்து கொண்டு கிரண், தேஜா ஆகிய இருவரையும் பிடித்து பன்னையில் தலைகீழா கட்டி தொங்கவிட்டு அடித்துள்ளனர். மேலும் தரையில் புகைப்போட்டு சித்தரவதை செய்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவத்தை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் கிரணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து ராமுலு, ஸ்வரூபா, ஸ்ரீநிவாஸ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆடு திருடியதாக இரண்டு பட்டியலின இளைஞர்களை தலைகீழாக தொங்கவிட்டு சித்திரவதை செய்த சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
தமிழ் மண்ணில் மத கலவரத்தை திட்டமிட்டால் ஓட ஓட விரட்டியடிப்போம் : RSS தலைவர் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!