India
ஆடு திருடியதாக சந்தேகம்.. பட்டியலின இளைஞரை தலைகீழாக தொங்கவிட்டு சித்திரவதை : தெலங்கனாவில் கொடூரம்!
தெலங்கானா மாநிலம் மஞ்சேரி மாவட்டத்திற்குட்பட்ட யாபால் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.ராமுலு. இவர் ஆட்டுப்பன்னை வைத்துள்ளார். இவரது ஆட்டுப்பனையிலிருந்து ஆடுகள் திருடப்பட்டுள்ளது. இதையடுத்து ஆட்டுப் பண்ணையில் வேலைபார்த்து வரும் நரேஷ் என்பவர் அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பட்டியலினத்தை சேர்ந்த கிரண் அவரது நண்பர் தேஜா ஆகியோர் தான் ஆடுகளை திருடி இருப்பார்கள் என சந்தேகத்தின் பேரில் கூறியுள்ளார்.
இதனால் ஆட்டுப்பனை உரிமையாளர் ராமுலு, அவரது மனைவி ஸ்வரூபா, மகன் ஸ்ரீனிவாஸ் மூன்று பேரும் சேர்ந்து கொண்டு கிரண், தேஜா ஆகிய இருவரையும் பிடித்து பன்னையில் தலைகீழா கட்டி தொங்கவிட்டு அடித்துள்ளனர். மேலும் தரையில் புகைப்போட்டு சித்தரவதை செய்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவத்தை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் கிரணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து ராமுலு, ஸ்வரூபா, ஸ்ரீநிவாஸ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆடு திருடியதாக இரண்டு பட்டியலின இளைஞர்களை தலைகீழாக தொங்கவிட்டு சித்திரவதை செய்த சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
#சந்தேஷ்காளி : பெண்ணை மிரட்டி பாலியல் பாலியல் வன்கொடுமை புகார் அளிக்க வைத்த பாஜக : வெளிவந்த வாக்குமூலம் !
-
முதலில் எய்ம்ஸ், இப்பொது சென்னை மெட்ரோ : தமிழ்நாட்டுக்கு மட்டும் நிதி ஒதுக்க மறுக்கும் ஒன்றிய பாஜக அரசு !
-
பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டும் : ஐ.நா-வில் நிறைவேறிய தீர்மானம் !
-
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அக்பர்பூர் பெயர் மாற்றப்படும் : யோகி ஆதித்யநாத் பிரச்சாரத்தால் அதிர்ச்சி!
-
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்த சாய் சுதர்சன் : IPL தொடரில் எழுச்சி பெற்ற தமிழ்நாடு வீரர் !