India
மக்களின் வீடுகளை இடித்த பா.ஜ.க அரசு.. பெண்கள் அரை நிர்வாணப் போராட்டம்: அசாமில் அவலம்!
அசாம் மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளார். பா.ஜ.க ஆட்சியில் தொடர்ந்து மக்கள் விரோத திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குவஹாத்தி நகரத்தில் உள்ள சில்சாகோ பீல் எரி அருகே உள்ள குடியிருப்புகளை பா.ஜ.க அரசு இடித்து தரைமட்டமாக்கியுள்ளது. இதற்கு அங்குக் குடியிருந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து அரை நிர்வாணமாகப் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது அங்கிருந்து போலிஸார் பெண்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்றியுள்ளனர்.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட மக்கள், "இந்த நிலத்தைப் பணக்காரர்களுக்குக் கோடிக்கணக்கில் விற்றுவிடலாம் என நினைத்து எங்களை பா.ஜ.க அரசு தூக்கி எறிந்துவிட்டது. இனி நாங்கள் எங்கே போவது? எங்கள் வாழ்க்கையே முடிந்துவிட்டது" என வேதனையுடன் கூறுகின்றனர்.
இந்த கொடூர சம்பவத்திற்கு எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அசாம் ஜாதிய பரிஷத் கட்சி தலைவர் லூரின்ஜோதி கோகோய், "பா.ஜ.க ஆட்சியில் பெண்களுக்கு இனி பாதுகாப்பு இல்லை. இதுபோன்ற போராட்டத்தால் நாங்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளோம். முதன்முறையாக எங்கள் மாநிலத்தில் பெண்கள் அடைகளைக் கழற்றி போராட்டம் நடத்தும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
வழிப்பறியில் ஈடுபடும் பாஜகவினர் : இளைஞரணி தலைவர் உட்பட 3 பாஜக நிர்வாகிகள் கைது - வேலூர் போலீஸார் அதிரடி !
-
"குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், புகாரளிக்க தயங்க வேண்டாம்" - சென்னை பெருநகர காவல் துறை!
-
மோடியின் பேச்சுகள் : “தேர்தல் அதிகாரிகளின் DNA-விலேயே அது இருக்கிறது...” - சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்!
-
கிர்கிஸ்தானில் வெடித்த வன்முறை : குறிவைக்கப்படும் வெளிநாடு மாணவர்கள் : இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை !
-
அயலகத் தமிழர்களுக்கான முக்கிய அறிவிப்பு: உறுப்பினர் பதிவு முதல் கல்வி, மருத்துவ உதவி வரை - முழு விவரம்!