India
நடுரோட்டில் அமேசான் மேலாளர் சுட்டுக்கொலை.. டெல்லியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
டெல்லி பஜன்புரா பகுதியைச் சேர்ந்தவர் ஹர்பிரீத் கில். இவர் அமேசான் நிறுவனத்தில் மூத்த மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு தனது மாமாவுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
இவர்கள் சுபாஷ் விஹார் பகுதிக்கு வந்த போது 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று தடுத்து நிறுத்தியது. பின்னர் அவர்கள் ஹர்பிரீத் கில் மற்றும் அவரது மாமா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதில் ஹர்பிரீத் கில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் அவரது மாமா படுகாயம் அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்து அங்க வந்த போலிஸார் படுகாயத்துடன் இருந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகளில் குற்றவாளிகளின் அடையாளங்களை வைத்து போலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!