India
கோயில் உண்டியலில் ரூ.100 கோடிக்கான செக்.. வங்கியில் விசாரித்த நிர்வாகிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி !
ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ வரஹாலக்ஷ்மி நரசிம்மா சுவாமி கோயில். இந்த கோயிலில் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்துவர். அதில் சில பக்தர்கள் கோயிலுக்கு நன்கொடையாகவே வழங்குவர்.
அந்த வகையில் பக்தர் ஒருவர் தனது காணிக்கையை செக் மூலம் உண்டியலில் செலுத்தியுள்ளார். மாதம் 2 முறை இந்த கோயிலின் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்படும். அவ்வாறு அண்மையில் இந்த உண்டியல் காணிக்கைகளை எண்ணிய கோயில் நிர்வாகிகளுக்கு அதில் இருந்து ரூ.100 கோடிக்கான காசோலை கிடைத்துள்ளது. இதனை கண்டதும் அனைவரும் ஆனந்த அதிர்ச்சியில் மூழ்கினர்.
இதையடுத்து இதுகுறித்து கோட்டக் மஹிந்திரா வங்கியை தொடர்பு கொண்டு கேட்டபோது இந்த காசோலைக்கு சொந்த நபரின் வங்கி கணக்கில் வெறும் ரூ.22 இருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்த நபர் போடேப்பள்ளி ராதாகிருஷ்ணா என்பதும், அந்த காசோலையில் முதலில் 10 ரூபாய் என்று எழுதிவிட்டு, பிறகு அதை அடித்து 100 கோடி ரூபாய் என்று எழுதப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த நபர் வேண்டுமென்றே இவ்வாறு செய்ததை அறிந்த கோயில் நிர்வாகிகள் அவர் மீது புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
கோயில் நிர்வாகிகளின் நேரத்தை வீணாக்கியதாகவும், கோயிலில் இவ்வாறு கிண்டல் செய்ததாகவும் கோயில் நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வங்கியில் வெறும் ரூ.22 மட்டுமே வைத்திருக்கும் நபர், ரூ.100 கோடிக்கு செக் எழுதி கோயில் உண்டியலில் போட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!