India
ஆட்டோவில் சென்ற ஆசிரியர்.. விலை உயர்ந்த iPhoneஐ பறித்து சென்ற இரண்டு வாலிபர்கள்: காட்டிக் கொடுத்த CCTV!
டெல்லியில் உள்ள கியான் பார்தி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் யோவிகா சவுத்ரி. இவர் பள்ளி முடித்து விட்டு தியோலியில் உள்ள தனது வீட்டிற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் திடீரென இவரது கையிலிருந்த விலை உயர்ந்த செல்போனை பறிக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர் செல்போனை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தார்.
இதனால் அவர் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்துள்ளார். பலத்த காயம் அடைந்ததால் அவரிடம் இருந்த செல்போனை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவத்தில் முகத்தில் பலத்த காயத்துடன் யோவிகா சவுத்ரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் கொடுத்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களுக்கு 20 முதல் 22 வயத்துக்குட்ட இளைஞர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதில் கிடைத்த அடையாளங்களைக் கொண்டு இருவரையும் பிடிக்க போலிஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
Also Read
-
“நாட்டிற்கு பெருமை சேருங்கள்! களம் நமதே! வெற்றி நமதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
”குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை இளைஞர்கள் மீது கொட்டாதீர் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி!
-
முதலமைச்சர் கோப்பை – 2025 நிறைவு! : கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தீபாவளி அன்று இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் : மக்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்!
-
RSS நிகழ்ச்சிகளுக்கு தடை? : தமிழ்நாட்டை பின்பற்ற தொடங்கிய கர்நாடகா - அமைச்சருக்கு மிரட்டல்!