India
ஆட்டோவில் சென்ற ஆசிரியர்.. விலை உயர்ந்த iPhoneஐ பறித்து சென்ற இரண்டு வாலிபர்கள்: காட்டிக் கொடுத்த CCTV!
டெல்லியில் உள்ள கியான் பார்தி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் யோவிகா சவுத்ரி. இவர் பள்ளி முடித்து விட்டு தியோலியில் உள்ள தனது வீட்டிற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் திடீரென இவரது கையிலிருந்த விலை உயர்ந்த செல்போனை பறிக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர் செல்போனை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தார்.
இதனால் அவர் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்துள்ளார். பலத்த காயம் அடைந்ததால் அவரிடம் இருந்த செல்போனை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவத்தில் முகத்தில் பலத்த காயத்துடன் யோவிகா சவுத்ரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் கொடுத்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களுக்கு 20 முதல் 22 வயத்துக்குட்ட இளைஞர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதில் கிடைத்த அடையாளங்களைக் கொண்டு இருவரையும் பிடிக்க போலிஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!