India
இளைஞரை தாக்கிய சிறுத்தை.. இறுதியில் சிறுத்தைக்கு நேர்ந்த கதி.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம் !
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிகரே என்ற பகுதியை அடுத்துள்ளது பாகி பாலு என்ற கிராமம். இந்த கிராமத்தில் பல்வேறு மக்களும் வசித்து வரும் நிலையில், வேணுகோபால் (எ)முத்து என்ற வாலிபர் தனது குடும்பத்துடன் வசித்துவ வருகிறார். விவசாய தொழில் செய்த்து வரும் இவர், தினமும் தான் வேலைக்கு செல்லும் இடத்துக்கு இரு சக்கர வாகனத்தில் செல்வது வழக்கம்.
அந்த வகையில் சம்பவத்தன்று காலை வேணுகோபால் தனது இரு சக்கர வாகனத்தில் தன்னுடைய தோட்டத்துக்கு சென்றுள்ளார். அப்போது இவர் வருவதை கண்ட அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று இவரை தாக்க முயன்றது. இதனால் அவர் தனது வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். தொடர்ந்து அவரை சிறுத்தை கடுமையாக தாக்கியது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் சிறுத்தையை எதிர்த்து போராடினார். தொடர்ந்து போராடிய அந்த இளைஞர் இறுதியாக சிறுத்தையை அடக்கி, அதன் கை, கால்களை கயிற்றால் கட்டி போட்டு தனது பைக்கில் உடம்பையும் சேர்த்து வைத்து கட்டிப்போட்டார். பின்னர் கட்டிப்போட்ட அந்த சிறுத்தையை தனது பைக்கிலேயே ஊருக்குள் கொண்டு வந்தார்.
இளைஞர் சிறுத்தையை கட்டிப்போட்டு கொண்டு வந்ததை கண்ட ஊர் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனர். இதைத்தொடர்ந்து அந்த இளைஞருடன் சேர்ந்து சில பேர், அந்த சிறுத்தையை வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்று விட்டனர். தற்போது அந்த சிறுத்தை வனத்துறை கட்டுப்பாட்டில் சிகிச்சை பெற்று வருகிறது.
அதே சமயத்தில் சிறுத்தை தாக்கியதில் பாதிக்கப்பட்ட இளைஞரும், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தன்னை தாக்கிய சிறுத்தையின் கை, கால்களை கட்டி போட்டு ஊருக்குள் கொண்டு வந்த இளைஞரின் செயல் தற்போது கர்நாடகத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
Also Read
-
“ஒன்றிய அரசின் அலட்சியம்.. கோவையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை.. தொடரும் நீட் தேர்வு மரணம்”
-
“ஆழம் தெரியாமல் காலை விட்ட தவெக, முடியாததால் வெள்ளை அறிக்கை தருகிறதா?” : தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி!
-
“மரண ஓலம் விஜய் காதில் விழாவில்லையா? - என்ன செய்கிறது சிங்கப் பெண் படை?” : கொந்தளித்து சீறும் ‘முரசொலி’!
-
FIFA உலகக் கோப்பை: மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலண்ட் அதிரடி; வெற்றியுடன் தொடங்கிய ஜாம்பவான்கள்!
-
“வெளியானது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை.. விரைவில் பதில் கூறுகிறேன்” : தங்கம் தென்னரசு!