India
ம.பி.யைத் தொடர்ந்து உ.பி: பட்டியலின இளைஞர் காதில் சிறுநீர் கழித்து கொடுமை.. பாஜக ஆளும் மாநிலத்தில் சோகம்
மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதலமைச்சராக சிவராஜ் சிங்க சவுகான் உள்ளார். இந்த மாநிலத்தில் பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர், இஸ்லாமியர்கள், பழங்குடியின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 3 மாதங்களுக்கு முன்னர் மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது பாஜக நிர்வாகி ஒருவர் மதுபோதையில் சிறுநீர் கழித்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ சமீபத்தில் வைரலான நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவரை விடுதலை செய்யவேண்டும் என பிராமண சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில், பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளைஞரின் காதில் ஒருவர் சிறுநீர் கழித்துள்ள வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா அருகில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஜவஹர் படேல் என்பவரும் தெரிந்தவர்களாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
இவர்களுக்குள் கடந்த ஜூலை 11-ம் தேதி மதுபோதையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜவஹர் படேல் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞரை தாக்கியுள்ளார். இதில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் சுயநினைவற்று கீழே விழுந்துள்ளார். அப்போதும் ஆத்திரம் தீராத ஜவஹர் படேல், அவரை பழிவாங்கும் விதமாக பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளைஞரின் காதில் சிறுநீர் கழித்துள்ளார்.
இதனை அங்குள்ள ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட அது இணையதளத்தில் வேகமாக பரவியுள்ளது. இந்த சிறுநீர் களித்த வீடியோ அடுத்த நாள் அந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளைஞருக்கும் செல்ல, அவர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார், ஜவஹர் படேல் மற்றும் அவரது நண்பர் ஒருவரை கைது செய்தனர். இந்த சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.23 அன்று வாக்குப்பதிவு! : இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
-
NDA-க்கு எதிராக முழங்கிய தமிழ்நாடு! : மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! : தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!
-
“மக்களுக்காக மேலும் உழைக்க காத்திருக்கிறோம்!” : திருப்பத்தூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!