India
ம.பி.யைத் தொடர்ந்து உ.பி: பட்டியலின இளைஞர் காதில் சிறுநீர் கழித்து கொடுமை.. பாஜக ஆளும் மாநிலத்தில் சோகம்
மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதலமைச்சராக சிவராஜ் சிங்க சவுகான் உள்ளார். இந்த மாநிலத்தில் பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர், இஸ்லாமியர்கள், பழங்குடியின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 3 மாதங்களுக்கு முன்னர் மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது பாஜக நிர்வாகி ஒருவர் மதுபோதையில் சிறுநீர் கழித்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ சமீபத்தில் வைரலான நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவரை விடுதலை செய்யவேண்டும் என பிராமண சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில், பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளைஞரின் காதில் ஒருவர் சிறுநீர் கழித்துள்ள வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா அருகில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஜவஹர் படேல் என்பவரும் தெரிந்தவர்களாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
இவர்களுக்குள் கடந்த ஜூலை 11-ம் தேதி மதுபோதையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜவஹர் படேல் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞரை தாக்கியுள்ளார். இதில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் சுயநினைவற்று கீழே விழுந்துள்ளார். அப்போதும் ஆத்திரம் தீராத ஜவஹர் படேல், அவரை பழிவாங்கும் விதமாக பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளைஞரின் காதில் சிறுநீர் கழித்துள்ளார்.
இதனை அங்குள்ள ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட அது இணையதளத்தில் வேகமாக பரவியுள்ளது. இந்த சிறுநீர் களித்த வீடியோ அடுத்த நாள் அந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளைஞருக்கும் செல்ல, அவர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார், ஜவஹர் படேல் மற்றும் அவரது நண்பர் ஒருவரை கைது செய்தனர். இந்த சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அம்மோனியா வாயுக் கசிவு: “எந்தவொரு சமரசத்திற்கும் இந்த அரசு இடம் கொடுக்கக் கூடாது” - உதயநிதி வலியுறுத்தல்!
-
“ஏ.. எடு.. எடு..” -சேலம் பேருந்து நிலையத்தில் பெண்களிடம் மாமூல்.. அட்ராசிட்டியில் ஈடுபடும் தவெக நிர்வாகி!
-
திருவள்ளூர் அம்மோனியா வாயுக் கசிவு : 2 பேர் பலி... 50-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை - விவரம்!
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!