India

கணவர் பிறந்தநாளுக்கு Surprise கொடுக்க வந்த மனைவி.. திடீரென 2 குழந்தைகளுடன் எடுத்த விபரீத முடிவு: நடந்தது?

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புரி பகுதியை சேர்ந்தவர் தம்பதி ஒருவர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த 4-5 ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணமான நிலையில், 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். மனைவி குடும்பத்தை மட்டுமே கவனித்து வந்த சூழலில், கணவர் ஜோத்பூரில் தங்கி இருந்து பணிபுரிந்து வந்துள்ளார். இருப்பினும் தனது மனைவி பிள்ளைகளிடம் தினமும் போனில் பேசி வரும் இவர், அவ்வப்போது மட்டுமே குழந்தைகளை பார்க்க நேரில் வருவார்.

இந்த நிலையில், நேற்று கணவருக்கு பிறந்தநாள் என்பதால் அவரது மனைவி Surprise கொடுக்க எண்ணியுள்ளார். அதன்படி தனது 2 பிள்ளைகளையும் அழைத்து கொண்டு அவர் தங்கி இருக்கும் பகுதியான ஜோத்பூருக்கு சென்றுள்ளார். அங்கே சென்ற அவர், தனது கணவரை போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

இதனால் வேறு வழியில்லாமல் அவர் வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று விசாரித்து பின்னர் கணவர் தங்கி இருக்கும் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கே சென்றபோது தனது கணவர் வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதை கண்டு அதிர்ந்து போனார். அதனை வீடியோவாக எடுத்து, அதை வைத்து தனது கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்குள்ள வாக்குவாதம் முற்றிப்போகவே, தனது கணவர் தொடர்பான வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு, ஓடும் இரயில் முன் தனது இரு குழந்தைகளுடன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரயில்வே காவல்துறையினர் மனைவி - 2 குழந்தைகள் என மூன்று பேரின் உடலையும் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்ந்து இவரது தற்கொலைக்கு காரணமான அவரது கணவர், மற்றும் அவருடன் இருந்த பெண்ணையும் தேடி வருகின்றனர். கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற 2 பிள்ளைகளுடன் சென்ற மனைவி ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: ”சாத்தான் சொன்னதால் மனைவியின் மூளையை சாப்பிட்டேன்”.. போலிஸார் விசாரணையில் ஷாக் கொடுத்த கணவர் !