India
50 கிலோ தக்காளி திருட்டு.. ரூ.1.50 லட்சம் மதிப்பு: கர்நாடகாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
பருவமழை காரணமாக இந்தியா முழுவதும் தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சில மாநிலங்களில் ரூ.200க்குக் கூட தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
இப்படி கடுமையாகத் தக்காளி விலை உயர்ந்துள்ளது ஏழை, எளிய மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. மேலும் தக்காளி விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
டெல்லியில் பா.ஜ.க அலுவலகம் முன்பு நேற்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தக்காளிக்கே போலிஸ் பாதுகாப்பு போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும் என பலரும் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் கர்நாடகாவில் ரூ.50 கிலோ தக்காளியை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கோனி சோமாஹள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிக்குச் சொந்தமான பண்ணையில் விற்பனைக்காகத் தக்காளி மூட்டைகளை வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் இந்த பண்ணைக்குள் புகுந்த மர்ம நபர்கள் 50 கிலோ தக்காளியைத் திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.1.50 லட்சமாகும். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!